சுதந்திர காற்றை சுவாசிப்போம்..20
சுதந்திர தின கவிதை
சுதந்திரக் காற்றைச் சுவாசிப்போம்
**********************
இன்னுயிரைத்
தந்தனர்
இத்தேசத்தைக்
காத்திட //
இயன்றவரைப்
போராடினர்
அந்நியரை
விரட்டிட //
தன்னலம்
துறந்தனர்
தன்னிறைவு
பெற்றிட //
இன்னலைத்
தீர்த்தனர்
அடிமைத்தனம்
விலகிட //
வியர்வையுடன்
இரத்தமும்
சிந்தினர்
நாட்டிற்காக //
விந்தை
மனிதர்களை
இழந்தோம்
விடுதலைக்காக //
விண்ணைப்
பிளந்தது
முழக்கம்
சுதந்திரத்திற்காக //
மண்ணை
கவ்வினர்
அந்நியர்கள்
அகிம்சைக்காக //
தேசம்
எங்கிலும்
நேசம்
கண்டோம் //
பல்லின
மக்களோடு
பாசம்
கொண்டோம் //
பாரினில்
புகழைத்
தேடித்
தந்தோம் //
அடிமைத்தனம்
உடைத்து
சுதந்திரம்
பெற்றோம் //
சுதந்திரக்
காற்றைச்
சுவாசிப்போம்
இனிதே //
அதனைக்
காத்திடும்
கடமை
நமதே //
தாய்நாட்டை
நாம்
நாளும்
நேசிப்போம் //
தாயின்
மணிக்கொடிக்கு
வணக்கம்
செலுத்துவோம்.... //
கவிஞர்.வங்கனூர்.த.சீனிவாசன், திருத்தணி.
Comments (0)