விடியல் காணட்டும் பெண்கள்

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கவிதை

விடியல் காணட்டும் பெண்கள்

விடியல் காணட்டும் பெண்கள்
-------------------------------------------------------------
வேத காலத்தில்
   வென்றே இருந்தவள், 
தேக பலத்தில்
      திமிராய் தெரிந்தவள், 
மாய சக்தியாய்
     மன்றத்தில் நின்றவள், 
பாரை ஆண்ட
       பராசக்தி ஆனவள்,, 
இல்லம் என்னும்
         இனிய சிறையில், 
விரும்பியே வீழ்ந்திடும்
       விண்ணின் மகள், 
பூதேவியை மிஞ்சிடும்
       பெண்ணவள் பொறுமை, 
ஒன்றை ஒன்பதாய்
        பெருக்கியே காட்டுவாள், 
கல்வியில் என்றும்
       முன்னிலை கண்டே, 
கனவை  நனவாக்கி
      நாட்டையும் ஆளுவாள், 
விருப்பம்  இல்லை
       என்றால்   -  கொடிய
அமில   வீச்சும்
         அவள் முகத்தில், 
மூடியே   வைத்த
      முத்தைப் போலன்றி, 
குடத்திலே வைத்த
     விளக்காய் இல்லாது, 
முட்டியே  முளைத்திடும்
      பெண்ணெனும் பேராற்றல், 
இனியேனும் விடியலைக்
      காணட்டும் பெண்மை.  
 
              முனைவர்                                                   
   சகுந்தலா ராமலிங்கம்.