சரித்திர நாயகன் அண்ணல் அம்பேத்கர் 030
அறிவர் அம்பேத்கர் விருது கட்டுரைப் போட்டி
சரித்திர நாயகன் அண்ணல் அம்பேத்கர்
உலக கலங்கரை விளக்கம் நீங்கள்/
இந்திய மக்களுக்கு எதிராகச்
சாதி என்ற பெயரால் நாட்டியம்
ஆடும் சதிகாரக் கூட்டங்களை/
இந்தியாவின்
அரசியலமைப்புச் சட்டத்தால் சாட்டை அடி கொடுத்த நவரச நாயகன்/
சட்டங்களாலும் பல பட்டங்களாலும்
இந்தியாவின் மானத்தைக்
காத்தவர் நீங்கள்/
அனைவரும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுத் தந்த வள்ளல் நீங்கள்/
பாமர மக்களும்
கல்வி கற்க வேண்டும் எனப் போராடிய
போராளி நீங்கள்/
சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று சொன்னவர் நீங்கள்/
கடவுளுக்குத் தரும் காணிக்கையும் ஏழைகளுக்கு அளிக்கும் கல்வியும் ஒன்று என்ற மகத்தான கொள்கையைக் கொண்டவர் நீங்கள்/
இப்படிப் பிறப்பு முதல் இறப்பு வரை மக்களுக்காகவே போராடிய போர் வீரர் ஐயா நீங்கள்/
உங்கள் விடாமுயற்சி வெற்றியைத் தந்தது புது சரித்திரம் படைத்தது
சரித்திர நாயகன் நீரே ஐயா/
-இர.உஷாநந்தினி சதீஷ்குமார்,
கோவை.
Comments (0)