யாதும் ஊரே...! 046
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
"யாதும் ஊரே"
பிரிவுகள் அனைத்தும் எண்ணமுர பிரித்தகற்றி
நாவுகள் அனைத்தும் நாட்டியமாடும் வண்ணமாய்
போர்முனையின் போர்க்கலண்களை போக்கடித்து
சமாதானத்தின் வேட்கை நெஞ்சிலே நிரம்பிட
ஒற்றுமையின் காதலால் கண்ணிமைகள் கலங்கி பார்ப்போர் அனைவரையும் தாமெனக்கொண்டு
பிரிவின் களமாயினும் இணைவதே நலமென
இருப்போர் யாவரையும் இணைத்து
உறவுக்கோர் ஊன்றுகோலை அமைத்து
எல்லைக் கோடுகளை எடுத்தெறிந்து
பாசமும் நேசமும் பழக்கத்தில் புனைந்து
சுமக்கும் தாயின் கருவரை வேறுபாடகற்றி
ஆள்பவர்கள் நெஞ்சில் ஆழமாய் பதிய
சாஸ்திரங்களை சரிவர விலக்கி
உரைக்க உரக்க சொல்வோம் "யாதும் ஊரே"
அனைத்தும் நம் நாடே ...!
- சேவா ரத்னா ஈரோடு ரமேஷ்.
Comments (0)