அண்ணா என்னும் ஆகாயம் ...! 060
அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி
அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்
சாதாரண மனிதன்
சாதனை படைத்தவர்
வரலாறு கொண்டது
வலுவாகச் சொன்னது
காஞ்சியில் தவழ்ந்து
கல்வியும் கற்று
பச்சையப்பாவில் பயின்று
பறந்தார் புகழில்
ஆசிரியப் பணியில்
ஆரம்பித்த வாழ்க்கை
அடுக்கடுக்காகச் சிகரம்
ஆவலாய்த் தாவினார்
பத்திரிக்கை ஆளனும்
அதற்கு உதவியாசிரினனும்
புதுப் பத்திரிகை
ஆசிரியராகவும் எழுதினார்
பேனா எழுதியது
பேராளும் சொற்களை
திராவிடக் கட்சியின்
கொள்கை நியமங்கள்
எழுத்திலும் மேடை
எழுச்சிப் பேச்சிலும்
சர்க்கரைப் பந்தலில்
தேன்மாறிப் பொழிந்தார்
நாடகங்கள் கட்டுரைகள்
திரைப்பட வசனங்கள்
கதைகள் கருத்துகள்
எழுதிக் குவித்தார்
கடமை கண்ணியம்
கட்டுப்பாடு காத்தார்
மாற்றான் தோட்டத்து
மல்லிகையும் மணக்குமென்றார்
அடுத்தவர் மனதை
அல்லல் செய்ததில்லை
மாற்றாளர் கருத்தும்
மதித்திடல் நன்றென்றார்
திராவிட முன்னேற்றக்
கழகம் துவக்கி
ஆட்சியைப் பிடித்து
காங்கிரசைத் தோற்கடித்தார்
அழகான மொழியாம்
தமிழும் நாட்டின்
பெயரில் வந்திட
தமிழ்நாடு பெயரிட்டார்
ஆட்சியில் இருந்தது
குறுகியக் காலம்
மக்கள் மனத்தில்
நிறைந்த ஆட்சியாம்
ஆங்கிலப் பேச்சிலும்
இருமொழிக் கொள்கையிலும்
திடமாக இருந்தார்
புற்றுநோயில் மறைந்தார்
புறஉடம்பு மறைந்தாலும்
மக்கள் மனதில்
நீங்காத இடத்தைப்
பிடித்து வாழ்கிறார்
மெரினா என்றதும்
கடற்கரை ஞாபகம்
அண்ணாவிற்கு அடுத்ததே
மனதில் எழுந்திடும்.
- முனைவர் கு.கதிரேசன்
திருச்சி.
Comments (0)