ஏவுகணை நாயகன்...

அப்துல் கலாம் பிறந்த நாள் கவிதை

ஏவுகணை நாயகன்...

ஏவுகணை நாயகன்

 இந்தியாவின் முத்தே இராமேஸ்வரத்தில் பிறந்த சொத்தே
மாறாத மனம் கொண்ட
மாணிக்க விளக்கே

இந்திய அறிவியலாளரும்
இந்தியாவின் குடியரசுத் தலை வருமானவரே

ஏழைகளின் தோழன்
ஏணியான பண்பாளன்
பலபட்டங்களும் பதவிகளும் பெற்று
சட்டத்தைக் காத்தவரே

ஊலலை ஒழிக்க
உற்சாகமாய் செயல்பட்டவரே இளைஞர்களை கனவுப்
பாதைக்கு வழிகாட்டியவரே

உதவிகள் பலபுரிந்து
உறுதியாய் இருந்தவரே
பதவிகள் பலசெய்து
பாராட்டைப் பெற்றவரே

ஏவுகணை நாயகனாய்
ஏற்றம் கண்டவரே
பேச்சாற்றல் மிக்கவரே
மக்கள் மனதைக் கொள்ளை கொண்டவரே

அகிலமும் பேசியது
அவரின் புகழை
மகிமை கொண்ட
மண்ணின் மைந்தனே

- கிருஷ் அபி,

இலங்கை.