ஊனாகி உயிராகிய காதல்...! 041
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி
ஊனாகி உயிராகிய காதல்...
கட்டியணைத்து முத்தங் கொடுக்கவில்லை
காதலியே கற்கண்டே என்று கொஞ்சவில்லை
நீயின்றி நானில்லை என்று வெண்பா பாடவில்லை
ஓரவிழிப்பார்வையிலே ஓராயிரம் கவிதை வடிக்கவில்லை
பட்டும் பிளாட்டினமும் தந்தென்னை படபடக்க வைக்கவில்லை
என் வலியறிந்து எனக்கு ஆறுதல் சொன்னாய்!
களைப்பறிந்து கை கொடுத்தாய்!
என்ன செய்வேனோ என்று நான் கலங்கிய தருணம் நான் இருக்கிறேன் என்று எனக்குத் தோள் கொடுத்தாய்!
காதலென்பது பாகாய் உருகி பனியாய் கரைவது மட்டுமல்ல -
வீழாமல் பற்றிக்கொள்வதும்
வீழ்ந்துவிட்டால் எழ கரம் கொடுப்பதுமே
#அன்புக்கவி
#vpr
- வாணிப்ரியா இரகுநந்தன்
சிட்னி - ஆஸ்திரேலியா.
Comments (0)