பாரதியின் இலக்கே... நம் இலக்கு...! 050

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பாரதியின் இலக்கே... நம் இலக்கு...! 050

பாரதியின் இலக்கே நம் இலக்கு...

அச்சத்தை தூக்கி எறி வாழ்வினில்//

ஆதரவளிக்கும் எண்ணத்தோடு பயணத்திடு//

இனிமையான வார்த்தைகளோ தெளிவாய் அமைந்திட//

ஈடில்லா உலகில் அனைவரும் ஒன்றே//

உண்மை காலங்கள் கடந்தும் நிற்கும் வாக்கினிலே//

ஊக்கம் தரும் முத்துக்களை அள்ளிக் கொடுத்திட//

ஐயத்தை வாழ்வில் மறந்திட //

ஒன்றே குலமாய் மனிதன் உணர்விலே கலந்திட//

ஓங்கும் குரலாய் நிலைத்திட//

மனதில் உறுதி //
ஓடும் குருதியிலே//

 வேண்டாமே விரக்தி// 

வெற்றியை அடைய வேண்டுமே சக்தி// 

அதற்கு வேண்டுமே பாரதி மீது பக்தி//

ஓயாமல் உழைத்திடு//

அதிலே பிழைத்திடு//

என்றும் நிலைத்திடு//

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் பணிவோடு பயணித்திடு //

பாரத இயற்றி வைத்த தீ உனக்குள்ளே எரியட்டும்//

உன் கால்கள் வெற்றி நடை போடட்டும்//

பாரதியின் கவிப்புலமை
அதுவே நம் வலிமை//

பாரதியின் இலக்கு நம் வாழ்வின் இலக்கு//

அதை நீ உணர்ந்து கலக்கு வாழ்வினில்//

ஜொ.சி.மோனிஷா கோவை