பாரதியின் இலக்கே... நம் இலக்கு...! 050
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
பாரதியின் இலக்கே நம் இலக்கு...
அச்சத்தை தூக்கி எறி வாழ்வினில்//
ஆதரவளிக்கும் எண்ணத்தோடு பயணத்திடு//
இனிமையான வார்த்தைகளோ தெளிவாய் அமைந்திட//
ஈடில்லா உலகில் அனைவரும் ஒன்றே//
உண்மை காலங்கள் கடந்தும் நிற்கும் வாக்கினிலே//
ஊக்கம் தரும் முத்துக்களை அள்ளிக் கொடுத்திட//
ஐயத்தை வாழ்வில் மறந்திட //
ஒன்றே குலமாய் மனிதன் உணர்விலே கலந்திட//
ஓங்கும் குரலாய் நிலைத்திட//
மனதில் உறுதி //
ஓடும் குருதியிலே//
வேண்டாமே விரக்தி//
வெற்றியை அடைய வேண்டுமே சக்தி//
அதற்கு வேண்டுமே பாரதி மீது பக்தி//
ஓயாமல் உழைத்திடு//
அதிலே பிழைத்திடு//
என்றும் நிலைத்திடு//
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் பணிவோடு பயணித்திடு //
பாரத இயற்றி வைத்த தீ உனக்குள்ளே எரியட்டும்//
உன் கால்கள் வெற்றி நடை போடட்டும்//
பாரதியின் கவிப்புலமை
அதுவே நம் வலிமை//
பாரதியின் இலக்கு நம் வாழ்வின் இலக்கு//
அதை நீ உணர்ந்து கலக்கு வாழ்வினில்//
ஜொ.சி.மோனிஷா கோவை
Comments (0)