குடியரசு தினம் கவிதை

குடியரசு தினம் கவிதை

குடியரசு தினம் கவிதை

குடியரசு தினம்

15. 08 .1947 ல் சுதந்திரம் அடைந்த இந்தியாவில்,
24 .01 .1950 ல் தனி அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்டு,
 26.01.1950 ல் செயலாக்கம் கண்ட *குடியரசு தினம்!*

சமத்துவம் தொடர்ந்து
சம உரிமை நீடித்து
பாரதம் செழித்து 
மக்கள் வாழ்வு சிறக்கும் 
*குடியரசு தினம்!*

தாயை நேசிப்பது போல 
தாய் நாட்டை மூச்சாய் சுவாசித்து வந்தே மாதரம் எனும் முழங்கும் 
*குடியரசு தினம்!*

எத்தனை மதம் 
எத்தனை மொழி 
எத்தனை ஜாதி 
எத்தனை பிரிவுகள் இருந்தாலும் 
நாம் அனைவரும் 
பாரத தாயின் பிள்ளைகள் 
என இதயத்தில் முழக்கமிடும் 
*குடியரசு தினம்!*

தேசிய தலைநகரில் 
ராஜ்பாத்தில், 
குடியரசுத் தலைவர் உரையும் 
குடியரசு தின அணிவகுப்பும் 
இந்திய கலாச்சாரம்  /சமூக
பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் 
 *குடியரசு தினம்!*

நீதி/சமத்துவம்/சுதந்திரம்  சகோதரத்துவத்தை உறுதி செய்து மக்களின் உரிமைகளோடு 
கடமைகளை நினைவூட்டும் 
அரசியல் சாசனமான 
*குடியரசு தினம்!*

மக்களுக்காக 
மக்களுடைய 
மக்கள் அரசு என 
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் ஜனாதிபதி 
ஆபிரகாம் லிங்கன் 
குடியரசு என்பதன் இலக்கணத்தை வகுத்து தந்த *குடியரசு தினம்!*

பாரதப் பிரதமரின் 
*ஜன் பாகிதாரி*  எனும் கருப்பொருளை பிரதிபலிக்கும் 
74 ஆவது *குடியரசு தினம்!*  

சிறந்த சேவை புரிந்தவருக்கு, 
வீர தீர சாகசம் செய்தவர்களுக்கு, விருது/பாராட்டு/பதக்கம் வழங்கி கௌரவிக்கும் *குடியரசு தினம்!*

அடிமைப்பட்டுக் கிடந்த தாய் நாட்டை தன்னுயிர் துச்சமென எண்ணி போராடி/சுதந்திரத்தை பெற்று தந்த தலைவர்களை/தியாகிகளை 
நினைவு கூர்ந்து மரியாதை செய்யும் *குடியரசு தினம்!*

ஒரே நாடு 
ஒரே பார்வை 
ஒரே அடையாளம் 
ஒரே கொடி 
நமது இந்தியா 
என நினைவிலேந்தும்
*குடியரசு தினம்!*

இறையாண்மை கொண்ட 
ஜனநாயக நாடாக 
பாரத அரசு பிரகடனப்படுத்திக் கொள்ளும் *குடியரசு தினம்!*

எகிப்து அரபு குடியரசின் அதிபர் 
அப்துல் ஃபத்தா அல் சிசி
சிறப்பு விருந்தினராக 
இந்திய குடியரசு தினத்தில் 
கலந்து கொண்டு 
தூதரக உறவினை பேணும் 
சிறப்பு மிகு *குடியரசு தினம்!*

ராணுவ அணி வகுப்பை பார்த்து தேசமே பெருமை கொண்டு தேசப்பற்றினை வளர்த்து,
மாவட்ட ஆட்சியர்கள் பறக்க விடும் மூவர்ண கொடியால் 
தேசத்தை உற்று நோக்க வைக்கும்
*குடியரசு தினம்!*

அரசர்களைக் கொண்டது முடியரசு மக்களால் உண்டானது குடியரசு 
என அன்று முதல் இன்று வரை நம்மோடு/நம் உணர்வோடு 
முடிவை எட்டா தீப ஒளியாய் வேற்றுமையில் ஒற்றுமையை வலுவாக்கும் *குடியரசு தினம்!*

அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பின் அடித்தளமாகி இடைவெளி இல்லா காற்றாக 
பாரதமெங்கும் 
சமத்துவத்தின் சான்றாகி
 காலம் காட்டும் கடிகாரமாக அனைவருக்கும் ஒரே சட்டம் 
என உணர்த்தும் *குடியரசு தினம்!*

 மாநிலங்களில் கவர்னரும் மாவட்டங்களில் ஆட்சியரும்
கம்பத்தில் உச்சியில் உள்ள 
கொடியை அவிழ்த்து 
பறக்க விடும் *குடியரசு தினம்!*

ராணுவ வலிமை 
கலாச்சார பன்முகத் தன்மை நிகழ்வோடு
 நாட்டின் வளத்தை 
குடியரசு தலைவர் 
ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் உரையாற்றும் *குடியரசு தினம்!* 

சுதந்திரம் காப்போம் 
சுதந்திரப் பிரஜையாய் 
பெருமிதம் கொள்வோம்!

முனைவர் பெ. தமிழ்ச்செல்வி வாலாஜாபேட்டை .