நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா...! 051

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா...! 051

நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா...

தமிழுக்குத்
தொண்டு 
செய்த 
பைந்தமிழரே //

தமிழன்னைக்குத் 
தேர்ப்பாகனாய் 
வலம் 
வந்தவரே //

திறம்பட 
வந்த 
எங்கள் 
மறவரே //

அறம்பாட 
வந்த 
எங்கள் 
அறிஞரே //

முழுமூச்சாய் 
விடுதலைக்
கவிபாடிய 
முண்டாசுக்காரரே //

எழுந்திடு 
மனிதாவென 
முழக்கம் 
செய்தவரே //

சிந்துக்குத் 
தந்தையான 
அற்புத 
விந்த்தையே //

சிந்தனையால் 
கவிபாடிய 
காவியத் 
தந்தையே //

இனியொரு 
விதி 
செய்திட்ட 
போராளியே //

இன்தமிழ் 
உணர்வை 
எழுப்பிய 
தமிழாழியே //

கனவு 
மெய்ப்பட 
வேண்டிய 
வேந்தரே //

கற்பனையில் 
மிதந்த 
காவியத் 
தலைவரே //

நீடுதுயில் 
நீக்க 
பாடிவந்த
நிலாவே //

நிலைகெட்ட 
மனிதரை 
நினைத்த
உறவே //

அழியாக் 
கவிதைகளைத் 
தந்திட்ட 
அமரகவியே //

அடிமைத் 
தலையை 
களைந்த 
தியாகியே //

என்றும் 
நீங்காப்புகழ்
பெற்ற
பாரதியே //

இன்றும் 
நிலையாய் 
நிற்கும் 
சாரதியே... //

கவிஞர்.வங்கனூர். த.சீனிவாசன்