நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா...! 051
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா...
தமிழுக்குத்
தொண்டு
செய்த
பைந்தமிழரே //
தமிழன்னைக்குத்
தேர்ப்பாகனாய்
வலம்
வந்தவரே //
திறம்பட
வந்த
எங்கள்
மறவரே //
அறம்பாட
வந்த
எங்கள்
அறிஞரே //
முழுமூச்சாய்
விடுதலைக்
கவிபாடிய
முண்டாசுக்காரரே //
எழுந்திடு
மனிதாவென
முழக்கம்
செய்தவரே //
சிந்துக்குத்
தந்தையான
அற்புத
விந்த்தையே //
சிந்தனையால்
கவிபாடிய
காவியத்
தந்தையே //
இனியொரு
விதி
செய்திட்ட
போராளியே //
இன்தமிழ்
உணர்வை
எழுப்பிய
தமிழாழியே //
கனவு
மெய்ப்பட
வேண்டிய
வேந்தரே //
கற்பனையில்
மிதந்த
காவியத்
தலைவரே //
நீடுதுயில்
நீக்க
பாடிவந்த
நிலாவே //
நிலைகெட்ட
மனிதரை
நினைத்த
உறவே //
அழியாக்
கவிதைகளைத்
தந்திட்ட
அமரகவியே //
அடிமைத்
தலையை
களைந்த
தியாகியே //
என்றும்
நீங்காப்புகழ்
பெற்ற
பாரதியே //
இன்றும்
நிலையாய்
நிற்கும்
சாரதியே... //
கவிஞர்.வங்கனூர். த.சீனிவாசன்
Comments (0)