தீபத் திருநாள் சுடரொளியாக மிளிரட்டும்
தீபாவளி கவிதை
தீபத்திருநாள் சுடராக மிளிரட்டும்
மெய்ஞாசான ஒளியை
மெய்யோடு ஏற்றி
பொய்மை அகற்றி
பொல்லாப்பு விலக்கி
அன்பால் கூடி
அனைவரையும் அரவணைத்தே
வன்மம் துரத்தி
வசந்தம் பிறக்க
அதிகாலை குளித்து
அழகாய் மலர்ந்து
இறைவனை வணங்கி
இதமாய் இருக்க
அறியாமை போக்கி
அகங்காரம் நீக்கி
ஆனந்தம் கொண்டு
ஆசிர்வாதம் கொடுத்தே
புத்தாடை அணிந்து
புதுப்பொழிவு பெற்று
மத்தாப்பு வானவெடிகள்
மகிழ்வாய் வெடித்து
உறவுகள் அழைத்து
உபசரித்து மகிழ்ந்து
உள்ளங்கள் இனிக்க
உதவிகள் புரிந்தே
பலதும் செய்து
பண்பை வளர்த்து
இன்பத் தீபாவளியை
இனிக்கக் கொண்டாடுவோமே
கிருஷ் அபி இலங்கை
Comments (0)