நிலாவில் வீடு கட்டி...
Nilla kavithai
இல்லற நூலகத்தில் புதிய புத்தகம் நீ !!
இனி யாரும் படிக்க முடியா! வரம் பெற்றாயோ நீ!!
ஒரு பக்கம் மட்டுமே படித்துவிட்டு!! ஒதுக்கப்பட்ட யோ நீ!
ஒரு! மறு இதய பக்கம் சிறகை விரிக்காது; சிறைப்பட்டாயோ நீ!
உன் கயல்விழி கண்டு கவிதைகள் கோடி வரும் !!
உனக்கு !கடலுக்குள் வீடு அமைத்திருப்பேன்!!
உன் விழி மீன்களை! கடலில் மீன்கள்! கண்டுஅஞ்சி ஒழிந்திருக்கும்!
உனக்கு ஆகாயத்தில் நீந்த வழி அமைத்திருப்பேன்! விண்மீன்கள் எல்லாம்!!
உன் வாழைத்தண்டு கால்களை! தீண்டிடுமே !!
விண் நிலாவில் வீடு அமைத்து இருப்பேன்! நிலாவின் குளிரிலும், உன் தேகம் வியர்க்குமே!! என்று
நிலத்தில் வீடு கட்டி கூடி விட முடியாது! என்று,,!!
நினைவாலே! என் இதயத்தில் வீடு கட்டி! உன்னை ஒழித்து,,! நின் அட்சயப் பாத்திர அழகை! வர்ணித்து!! கவி படைத்து!!
நிழலிலே! நினைவிலே! கூடி! நிஜத்திலே! பிரிந்து! நிகழ்விலே!
உன் நிஜ முகம் ,காணமுடியாது!
கவிஞன் ஆனேன் !!
கவிதை மாணிக்கம்!
Comments (0)