அன்பு தேசம்...! 030
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி
மின்சார கண்ணா...
பூகம்பமாயிருந்த என்னை பூக் கம்பமாக//
மாற்றிய என் அழகான ராட்சசனே//
என்னை ஆளும் அன்பு தேசமே//
வேதியல் மாற்றத்தையீந்த மின்சாரக் கண்ணனே//
காதல் தேர்வில் முதலிடம் பெற்றவனே//
பூவையனைக் காக்கும் பூந்தோட்டக் காவல்காரனே//
என் மனதிலும் என்றும் முதல்வனே//
என்னை என்றும் ஆளும் ஆணழகனே//
எனக்கு என்றும் விழுத்துணையான நாயகனே//
புயலென வாழ்வில் வந்த பேரழகனே//
ஆனந்தத்தை தரும் ஆனந்த ராகமே//
அன்னையாய் என்னை தாங்கும் தாயுமானவனே//
கம்பனும் ஷெல்லியும் நம் காதலை//
வாழ்த்திப் பாட உயிர்த்தெழ அழைப்போமாக. . . //
இசைப்பேரரசி
லதா சங்கரன்
சென்னை
Comments (0)