அன்பு தேசம்...! 030

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

அன்பு தேசம்...! 030

மின்சார கண்ணா...

 பூகம்பமாயிருந்த என்னை பூக் கம்பமாக//

 மாற்றிய என் அழகான ராட்சசனே//

 என்னை ஆளும் அன்பு தேசமே//

 வேதியல் மாற்றத்தையீந்த மின்சாரக் கண்ணனே//

 காதல் தேர்வில் முதலிடம் பெற்றவனே//

பூவையனைக் காக்கும் பூந்தோட்டக் காவல்காரனே//

என் மனதிலும் என்றும் முதல்வனே//

 என்னை என்றும் ஆளும் ஆணழகனே// 

எனக்கு என்றும் விழுத்துணையான நாயகனே//

 புயலென  வாழ்வில் வந்த பேரழகனே//

ஆனந்தத்தை தரும் ஆனந்த ராகமே//

 அன்னையாய் என்னை தாங்கும் தாயுமானவனே//

 கம்பனும் ஷெல்லியும் நம் காதலை//

 வாழ்த்திப் பாட உயிர்த்தெழ  அழைப்போமாக. . . //


 இசைப்பேரரசி 
லதா சங்கரன் 
சென்னை