இப்படியும் ஒரு காதல்...

காதலர் தினம் கவிதை

இப்படியும் ஒரு காதல்...

இப்படியும் ஒரு காதல்...

என்னவனே
 மன்னவனே
சின்னவனே
சொன்னவனே

பலகதையும்
பரிவும்பாசமும் நேசமும் ஆசையும்
சொன்னவனே

நினைவிலே
நின்னவனே
நித்திரையைக் கொன்னவனே

நேற்றில்லை இன்றில்லை
நேத்திரமாய்
மாறியவனே

நித்தம் நித்தம் உன்னிசையே எந்தன் நெஞ்சிலே
வாசமாய்

கண்ணிலே
மையெழுதி
கருத்திலே உனையெழுதி
காலமெல்லாம் காதலிப்பேன்
நானே கட்டிவெல்லம் கசக்குமளவே

-முனைவர் கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை