கருணையை வளர்ப்போம் கண்ணீர் துடைப்போம்...!

உலக கருணை தினம் நவம்பர் 13, கவிதை

கருணையை வளர்ப்போம் கண்ணீர் துடைப்போம்...!

கருணையை வளர்ப்போம்
கண்ணீர் துடைப்போம்...!


அகிலத்தில் அன்பை
அறத்தோடு விதைத்திடு
ஆதரவற்ற உள்ளங்களை
அரவணைத்துக் காத்திடு

உயிர்கள் அனைத்திலும்
அன்பினைப் பொழிந்திடு
உனதுயிராய் அடுத்தவரையும்
உருகியே பார்த்திடு

இரக்கம் ஈகை
இனிப்பாய்க் கொடுத்திடு
இல்லாதோரின்  இழப்புக்களை 
இனிதாகச் சரி செய்திடு

ஊனமுற்ற மனங்களுக்கு
உதவிகள் கொடுத்திடு
க(ள)லங்கிய இதயங்களுக்கு
கண்ணீர் துடைத்திடு

முதியவர்களை முகம்கோணாமல்
புன்னகையோடு உபசரித்திடு
வளரும் சமூதாயம் கருணையினை உணர்ந்து கருத்தாய் நடந்திட வழிகள் காட்டிடு

-கிருஷ் அபி இலங்கை