ஏழைப் பங்காளர் அம்பேத்கர் 018
அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி
ஏழை பங்காளர் அம்பேத்கர்..
உலகத்தையே படித்தவர்
பாமர மக்களையும்
படிக்கச் சொன்னவர் அம்பேத்கர்
சாதி மதங்களைத் தீயிட்டுக்
கொளுத்தியவர்
பெண்கள் முன்னேற்றத்தை
நேசித்தவர்
இந்தியாவின் மானத்தை
வட்டமேசை மாநாட்டில் காத்தவர்...
மனித பாகுபாடுகளை
களைந்து எரியுங்கள்
சமத்துவத்தை நிலை நாட்டுங்கள் என்று
தன்னாட்டு மக்களுக்கு மட்டுமின்றி
உலக நாடுகளுக்கெல்லாம்
உரக்கச் சொன்னவர்.
இந்த இருபதாம் நூற்றாண்டு
இன்று போற்றி மகிழும்
நம் இந்தியாவின்
இரண்டாம் தந்தை அம்பேத்கர்
சமத்துவத்தின்
சமூக நல்லிணக்கத்திற்கான அறிஞர்
சட்ட மேதை, அறிவுச் சுடரொளி ஆனவர்..
உலகிலேயே மிக நீளமான
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை...
உழைப்பால் உயர்ந்த உத்தமர்
தீண்டாமை தீயை ஒழிக்கவே
சட்டங்கள் வகுத்திட்ட மாமேதை...
ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி
அஞ்சா நெஞ்சமுடைய தலைவர்..
வீரத்தின் விளைநிலம்
சாதிகளை ஒழிக்க சாதித்த தங்கத் தமிழன்..
நின் புழ் பரவட்டும் பூமி உள்ளவரை..
செல்வன். கோ. ஶ்ரீஆதேஷ்
கும்பகோணம்.
Comments (0)