அறிவர் அம்பேத்கர் 019

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அறிவர் அம்பேத்கர் 019


அறிவர் அம்பேத்கர்

 பல ஆயிரம் கஷ்டங்களை அனுபவித்து!

 பல மக்களை 
வாழ வைத்த 
பார் போற்றும் அண்ணல் அம்பேத்கர்!

 ஒருவர் உயராமல் குடும்பமேஉயரவும்
 ஊரும் நாடும்
 உன்னதம்
அடையவும்
 உழைத்த அண்ணல் அம்பேத்கர்!

 கல்வி கிடைக்காமல் கதறிய குழந்தைகளுக்கு!
 கவலைகள் போக்கி  இன்பமாக வாழ வைத்த எங்கள் அம்பேத்கர்!

 பொது கல்வித் துறையிலும் சட்டத்துறைகளிலும்  இன்று சாதிக்க வைத்த எங்கள் அம்பேத்கர்!

 அரசுப் பணிகளில் இன்று ஆயிரம் ஆயிரம் பேர் பணியாற்ற செய்த பகுத்தறிவு தந்தை அண்ணல் அம்பேத்கர்!

 மீண்டும் பிறந்து எழுந்து வாருங்கள் 
 உங்கள் குழந்தைகளின் உயர்வையும் உள்ளத்தையும் அறியஅறிவர் 
 அம்பேத்கர்!


-கவிஞர் இரா. வாசுகி 
பொன்னரசு அரசு பள்ளி ஆசிரியர்
கள்ளக்குறிச்சி