அன்பு 046

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

அன்பு 046

நேசித்தேன் என்னவரை...
அன்புக்காக...
அவர் பண்புக்காக....
அவர் ஆற்றலை உணர்ந்தேன்...
அறிவில் மயங்கினேன்....
பாசத்தை பாங்காய் பெற்றேன்....
நான் கவலை கொண்ட நேரத்தில் நல் துணையாய் விளங்குவார்.....
ஆறுதல் தருவார்...
என் அகம் மகிழும்...
உள்ளம் குளிரும்....... கன நேரத்தில் மனம் மகிழ மாற்றம் தருவார்...... புத்துணர்ச்சி என்ற உணர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி.....என்றும் இரு நெஞ்சம் இடையே எப்போதும் நெருக்கம்..... பெற்றோர் நிச்சயித்த திருமணம்..... இருவருக்கும்..... திருமணதிற்கு பின் காதல் கொண்டோம்....எந்நாளும் இனிமையாய் இதயம் இணைந்து... இனிதே செல்கிறது எங்கள் வாழ்க்கைப் பயணம்.....................அன்பிற்கு ஆதரமாய் அழகான குழந்தை..... தொடர்ந்து செல்வோம்....... திறந்த வானில் துள்ளிதிரிவோமே.....

முனைவர் சாந்தி முத்தமிழ் பாண்டியன், மயிலாடுதுறை