சேலையில் ஒரு சோலை வனம்

சேலை தினம் கவிதை

சேலையில் ஒரு சோலை வனம்

சேலையில் ஒரு சோலைவனம்


பண்பாட்டின் பெருமை
பாரம்பரிய வழி
பாரையும் தொடரும்
பலபேரின் அபிநயமே

சேலை கட்டும் பெண்ணுக் கொரு
அழகு உண்டு
நந்தவனமாய் மலர்ந்த
மலராய் சேலையில் ஒரு சோலையாய் தோன்றுவாள்

கட்டிய கண்டாங்கி
கெண்டக் காலோடு
காலில் கொலுசும்
கானத்தின் சதிபாட

பின்னலிட்ட நீண்ட
சடையும் பின்னழகை
மிதம்பாடி புத்தனையும்
பித்தனாக்கி கவிபாடும்

புடவையில் கவர்ந்து
புலம்ப வைத்து
கடமையும் தவரவைக்கும்
காதலின் மெல்லிடையாள்
அன்னமாய் நடக்கையில்
அனைத்துக் கண்களும்
காந்தமாய் ஈர்க்குமே

கிருஷ் அபி இலங்கை