அன்பும் அகிம்சையும்..
காந்தி ஜெயந்தி கவிதை
அன்பும் அஹிம்சையும்...
போரைவெறுத்து அன்பை பந்தலாய்த்தொடுத்த போர்பந்தல் தலைமகனே //
வீட்டின் கடைக்குட்டியானாலும் நாட்டின் முதன்மை தனயன் //
தென்னாப்பிரிக்கா பயணம் அரசியலுக்கு வித்திட்ட தருணம் //
மக்கள்பட்ட இன்னல்களாலும் அவமானத்திலும் துளிர்விட்ட விதையாய் //
அவ்விதையின் வழியில் முளைத்த மலரே காங்கிரஸ் //
சுதந்திர இந்தியாவை உருவாக்க பாடுபட்ட உன்னதன் //
அன்பையும் அஹிம்சையும் தாரகமந்திரமாய் கொண்ட தாளாளன் //
சத்தியாகிரகத்தால் நாட்டின் அந்நியசக்திகளை அச்சத்தில் தள்ளியவர் //
பணம்பகட்டில் வளர்ந்தாலும் கதர்ஆடையை அணிந்து எளிமையானார் //
வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தின் முச்சானார் //
நடைபயணத்தால் ஆங்கிலேயர்களை நடுங்கவைத்து உப்புவரியை உதிர்த்தவர் //
தீண்டாமையை எதிர்த்து அழிக்க போராடிய போராளி //
அந்நியர்களுக்கு ஒத்துழைக்க மறுத்த ஒத்துழையாமை இயக்கியன் //
வெள்ளையை உடையில் மற்றுமல்ல மனதிலும் கொண்டவர் //
சுதந்திரக்குழந்தையை அனைவரின் கைகளிலும் தவழவிட்ட
தேசியத்தந்தை //
ஏற்றதாழ்வற்று சமமாய் பாவித்த தன்னிகரற்ற தலைவன் //
நீதிமன்றத்தில் மட்டுமல்ல ஆங்கிலேயர்களிடமும் வாதிட்ட அறிஞர் //
அறவழியில் போரட்டங்கள் நடத்தி அறத்தை போதித்தவர் //
அஹிம்சையின் நாயகன் உயிர் பிரிந்தது ஹிம்சையால் //
அன்னலின் பிறந்தநாள் அன்பின், அறத்தின் அடையாளதினம் //
அன்பையும் அஹிம்சையும் சுவாசமாக கொண்ட கொடையாளன் //
மகான் என்றதும் மனதில் நினைப்பது காந்தியடிகள் //
ஆம் அவர் என்றும் என்றென்றும் காந்திமகான்.
இவண்.
பி.பத்ரிநாராயணன்
ஶ்ரீ பத்ரா அறக்கட்டளை
இராஜபாளையம்.
Comments (0)