அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம் 054.

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம் 054.

அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்...

தமிழ் தாய் பெற்றெடுத்த தத்துப்பிள்ளை...!

 தமிழகத்தை உருவாக்கிய தங்க பிள்ளை..!

மூன்று 'க' கொடுத்த முத்துப்பிள்ளை..!

 கடமை கண்ணியம் கட்டுப்பாடு கொடுத்த காஞ்சி பிள்ளை..!

 பெரியார் வழிவந்த அறிவு பெட்டகமே ..!இந்திய எதிர்த்த இமயமே..!

 நீதிக்கட்சியில் இருந்த நீதியே..!

 ஓர் இரவு உருவாக்கிய பகலவனே...!

வேலைக்காரி படைத்த வேந்தனே...!

பெரிய பூனைக்கு பெரிய வாசல்,

 சின்னப் பூனைக்கு சிறிய வாசல் ..!

மும்மொழிக் கொள்கைக்கு தீயை வைக்க ...!

ஹிந்தியை தமிழகத்துக்கு வெளியே வைக்க..!

நேர்முக வரி கொசு , மறைமுக வரி மூட்டை பூச்சி,

வங்க கடலில் உறங்குகிறது எதையும் தாங்கும் இதயம் அண்ணா மறைந்தாலும் அண்ணாவின் புகழ் மறையாது...!

வாழ்க தமிழ் ...! வளர்க ...! தமிழகம்...! ஓங்குக அண்ணாவின் உரை ...! 

- க.மகாலட்சுமி, ஆசிரியை, சங்கரன்கோவில்,