காந்தி
காந்தி ஜெயந்தி கவிதை
காந்தி
போர்பந்தரில் பிறந்த
புதிரான புத்திரன்
அறவழிப் போராட்டத்தை தொடக்கியவர்
ஏழைகளிடம் அன்பும் பரிவும்
கொண்டவர்
அகிம்சை வழியில்
சாதித்தவர்
தீண்டாமை ஒழித்த
தீமைகள் அகற்றியவர்
சுதேசி பொருட்கள் மீது
அதிக பற்றுக் கொண்டவர்
ஆங்கிலேயரிடம் நாட்டை அகிம்சை வழியில் மீட்ட
அகிம்சையின் திரு உருவம்
இந்தியாவின் தேசப் பிதா என்றழைக்கப்பட்டவர்
காகிதத்தில் ஒட்டி
காலத்திற்கும் மக்களோடு கருத்தாய் வாழ்பவர்
கிருஷ் அபி
Comments (0)