அலகிலா விளையாட்டு...
புதுக்கவிதை
அலகிலா விளையாட்டு
சருகுகள் போலவே
சட்டென்று உதிர்ந்திடும்
உயிரின் நிலை என்னடா - மனிதா
உயிரின் நிலை என்னடா?
சிட்டாங்குருவி போல்
சிறகடிக்கும் மனதுதான்
சட்டென்று உடைவதென்னடா-மனிதா
சட்டென்று உடைவதென்னடா?
வெட்டாத மரம்தான்
வேரோடு சாய்வதுபோல்
பட்டென்று சாய்வதென்னடா-மனிதா
பட்டென்று சாய்வதென்னடா?
ஏட்டிலும் இல்லாமல்
எழுத்திலும் எழுதாமல்
விதி எழுதி போவதென்னடா - வாழ்வை
விதி எழுதி போவதென்னடா
மனிதா
விதி எழுதி போவதென்னடா ?
காண்போம் என்பவர்
காணமலே போய்விடும்
அவலத்தின் முடிவென்னடா - மனிதா
அவலத்தின் முடிவென்னடா?
காற்றுடன் காற்றாக
கலந்திடும் மனிதருக்கு
சாதி மதமென்னடா - மனிதா
சாதி மதமென்னடா?
ஆகாய கோட்டைகள்
அடியோடு சாய்ந்த பின்
இருக்க இடமேதடா-மனிதா
இருக்க இடமேதடா ?.
மண்ணுக்கு உணவாக
போய்விடும் உடலுக்கு
நிரந்தரம் துளி ஏதடா – மனிதா
நிரந்தரம் துளி ஏதடா ?
நெஞ்சமும் கெட்டு
நினைப்பும் ஒழிந்த பின்
நிலைக்கும். வழி ஏதடா - மனிதா
நிலைக்கும் வழி ஏதடா ?
நித்திரை கெட்டு
நிம்மதி இழந்த பின்
புன்னகை இனி ஏதடா - மனிதா
புன்னகை இனி ஏதடா ?
உற்றாரும் வாரார்
உறவாரும் வாரர்
நட்டாற்றில் விடுவாரா _மனிதா
நட்டாற்றில் விடுவாரடா
ஒரு பிடி சாம்பலான பின்
ஆற்றோடு கரை வாயே
உடன் ஒடி வருவதேதடா - மனிதா
உடன் ஒடி வருவதேதடா?
நேற்று இருந்தார்
இன்றில்லை என்பது
காலத்தின் ஏற்பாடடா - மனித
காலத்தின் ஏற்பாடடா
கண்மூடித் திறந்தால்
மரணமும் ஐனமும்
அலகில்லா விளையாட்டடா – மனிதா
அலகில்லா விளையாட்டடா
தங்கேஸ்
Comments (0)