உலக இல்லத்தரசிகள் தினம் கவிதை
இல்லத்தரசிகள் தினம் கவிதை
உலக இல்லத்து அரசிககள் தினம்!
இதயத்தில் அரசியாகி!
இல்லத்தில் அரசியாக
திருமண அரங்கேற்றமாகி!
வானத்தின் நிலவாய்! சூரியனாய்!!_இதய
வானத்தின்
இன்ப விளக்காய் ! இரவின் குளிர் நிலவாய்!
விடியலில் விடிவெள்ளி
விண்மினாய்!
விறுவிறுப்பில், சுறுசுறுப்பில் ,,ஓயாத கடல் அலையாய்!
நீரும் இல்லை! நிலமும்இல்லை!
ஆனாலும் தலைவனின் உள்ளத்தில் நீந்தும் மீனாய்!
குழந்தைகளை வளர்ப்பதில் கோழிக்குஞ்சுகள் அடைகாக்கும் தாய்க்கோழியாய்!
அவைகளுக்கு அமுது படைக்கும் அமுதசுரபியாய்!
தலைவனின் உழைப்பை சேமிக்கும் சேமிப்பு வங்கியாய்!
தக்க தருணத்தில் சுமை தாங்கிய பயணத்திற்கு!நங்குரமாய்!
தாய் நாட்டுக்கு அரசியே!ஆனாலும்! தாய் வீட்டுக்கும் கணவனின் வீட்டுக்குஇல்லத்து அரசி!
கோவிலுக்கு அழகு சிலை என்றால் !இல்ல கோவிலுக்கு அழகு இந்த அரசி!
அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ! உள்ளம் கனிந்த! உலக இல்லத்தரசிகள் தினவாழ்த்துக்கள்!
கவிதை மாணிக்கம்..
Comments (0)