கந்த சஷ்டி திருவிழா கவிதை

சூரசம்ஹாரம் கவிதை

கந்த சஷ்டி திருவிழா கவிதை

சூரசம்ஹாரம் கவிதை 

அறுமுகம் கொண்ட திருமுருகா

அறுபடை வீடுகொண்ட திருமுருகா

உமையவள் நாயகனே முருகா

உலக நாயகனே முருகா

கணபதியின் தம்பியே சண்முகா

கார்த்திகை மைந்தனே சரவணா

கந்த சஷ்டி நாயகனே

வள்ளி தெய்வானை மணாளா

வளமான வாழ்வு தருவாயே

இடும்பனை வென்ற வேலவா

இருளிடர் போக்கும் வேலவா

குன்று தோராடும் குமரா

சூரனுக்கு அருளிய சேனாபதியே

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே

காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்....!!!

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

வீரவேல் முருகனுக்கு அரோகரா


திருக்குறள் தூதர்
க. விஜயசாமுண்டீஸ்வரி 
சென்னை.