அண்ணா என்னும் அறிவொளி..! 014.
அறிஞர் அண்ணா அறிவிச்சுடர் கவிதை போட்டி
அண்ணாவெனும் அறிவொளி...
வீறுக்கொண்ட பேச்சால்
தமிழன் நெஞ்சினில்
ஏறு கொண்டு உழுதவர்...
தமிழக வரலாற்றில்
தனக்கென தனியிடம் வகுத்தவர்...
ஜாதிமத பேதங்களையும்
மூடநம்பிக்கைகளையும்
வேரோடு களைந்தவர்...
பகுத்தறிவு பகலவனின்
மனதிற்கு பிடித்திட்ட
கருத்து செறிவாளன்
பலகோடி உயிர்களின் அபிமானன்...
அப்பாவியாய் தோற்றமளித்த அறிஞன்
குரலால் எழுத்தால்
தமிழ்நாட்டை ஆண்ட மன்னவன்...
தாய்நாட்டிற்கு தமிழ்நாடென
பெயர்சூட்டி
தமிழர்களை தலைநிமிரச் செய்தவர்..
சுடரொளி மங்கா அறிவின் ஆலயம்
எளிமையின் மறு உருவம்
மக்கள் மனதின் கதாநாயகன்
ஏனென்றால் என்ற வார்த்தையில் விளையாடி
ஆங்கிலேயனையும் ஆச்சரியபட வைத்தவர்
தன்னிகரில்லா தலைவன்
தமிழ்நாட்டின் விடிவெள்ளி
அண்ணாவெனும் அறிவொளி...
கோ.ஶ்ரீ ஆதேஷ்
கும்பகோணம்.
Comments (0)