உலக பருப்பு தினம் பிப்ரவரி 10 (World Pulses Day)

World Pulses Day,உலக பருப்பு தினம்,பிப்ரவரி 10,அவரையினம், மைசூர் பருப்பு, பட்டாணி, கொண்டைக் கடலை, லூபின்கள்,துவரம் பருப்பு,பாசிப்பருப்பு,பச்சை பயறு,கொண்டைக் கடலை,மைசூர் பருப்பு,சுண்டல்,கடலைப் பருப்பு,சிவப்பு காராமணி,மைசூர் பருப்பு,உளுத்தம் பருப்பு,தட்டை பயறு,

உலக பருப்பு தினம்  பிப்ரவரி 10  (World Pulses Day)

உலக பருப்பு தினம்  பிப்ரவரி 10  (World Pulses Day)

உலக பருப்பு தினம் (World Pulses Day) என்பது ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் (FAO) கொண்டாடப்படும் பன்னாட்டுத் தினமாகும். இது பருப்பு வகைகளின் முக்கியத்துவத்தை (அவரையினம், மைசூர் பருப்பு, பட்டாணி, கொண்டைக் கடலை, லூபின்கள்) உலகளாவிய உணர்த்தவும் அங்கீகாரம் செய்யவும் வழிவகைச் செய்கின்றது.

விளக்கம்
இது டிசம்பர் 20, 2018 அன்று ஐக்கிய நாடுகள் அவையின் எழுபத்து மூன்றாவது அமர்வில் 2019 முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 அன்று அனுசரிகக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது. உலகெங்கிலும் பருப்பு குறித்த செயல்பாடுகளையும் தகவல்களையும் ஒருங்கிணைக்க இது வாய்ப்பாக அமைக்கின்றது.

நோக்கம்
உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை நோக்கமாகக் கொண்ட நிலையான உணவு உற்பத்தியின் ஒரு பகுதியாகப் பருப்பு வகைகளின் ஊட்டச்சத்து நன்மைகள் பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலக பருப்பு தினம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

இது ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலுடன் இணைக்கப்பட்டுள்ளது - உலகளாவிய அமைதியை வலுப்படுத்த முற்படும் வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள் விரிவான தொகுப்பாகும்.

உலக பருப்பு தினம் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பினால் 2016ஐ பன்னாடு பருப்பு ஆண்டாக அறிவித்தபோது பெறப்பட்ட செயல்பாட்டின் வேகத்தினை தொடர்ந்து பராமரிக்கின்றது.


பருப்பு மற்றும் பயறு வகைகளின் முக்கியத்துவத்தை ஐ.நா. அமைப்பு கடந்த 2013ஆம் ஆண்டில் புரிந்து கொண்டதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு முழுவதும் பருப்புகளின் ஆண்டாக கொண்டாடப்பட்டது.

பருப்பு அல்லது பயறு என்பது உணவுக்காக தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் விதைகள் ஆகும். பொதுவாக துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப் பருப்பு மற்றும் பீன்ஸ் பயறு, பட்டானி போன்றவை மக்களால் அன்றாடம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளப்படும் பருப்பு வகைகள் ஆகும்.

உலகம் முழுவதிலும் உள்ள மக்கள், அவரவர் உணவு பழக்க வழக்கங்களுக்கு தகுந்தபடி பருப்புகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆண்டுதோறும் பிப்ரவரி 10ஆம் தேதி உலக பருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஐ.நா. சபை முதன் முதலில் இந்த தினத்தை கடந்த 2009ஆம் ஆண்டு கொண்டாடியது.

உலக பருப்பு தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்

பருப்பு மற்றும் பயறு வகைகளின் முக்கியத்துவத்தை ஐ.நா. அமைப்பு கடந்த 2013ஆம் ஆண்டில் புரிந்து கொண்டதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு முழுவதும் பருப்புகளின் ஆண்டாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து 2019 முதல் பருப்புகளின் தேவை மற்றும் அதன் பயன்பாடு குறித்து உலக அளவில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. வருகின்ற 2050ஆம் ஆண்டுக்கு உள்ளாக உலகின் பருப்பு உற்பத்தியை இரட்டிப்பாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நம் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் பருப்பு வகைகளில் நிரம்பியுள்ளன. இதனால் தான், இந்தியர்கள் மிக அதிகப்படியான பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். உடல் நலனை காப்பதிலு, உடல் எடையை குறைப்பதிலும் பருப்பு வகைகளின் பங்கு மிக பெரியது. இது மட்டுமல்லாமல் சாகுபடி பணிகளுக்கு உகந்தது. பருப்பு வகைகள் மூலமாக மக்களின் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதாக இந்த பயிர் வகைகள் அமைந்துள்ளன.

பருப்பு தினத்தின் நோக்கம்

இளைஞர்கள் மத்தியில் நிலையான விவசாய தொழிலை வளர்த்தெடுக்க பருப்பு வகை பயிர்கள் மிக உதவிகரமாக இருக்கும் என்று ஐ.நா. அமைப்பு நம்புகிறது. பருப்பு சாகுபடி மற்றும் அதன் மதிப்பு கூட்டுப் பொருள் உற்பத்தி மூலமாக ஏராளமான கிராமப்புற பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

பருப்பு உணவு முறை

பருப்பு மற்றும் பயறு வகைகளின் முக்கியத்துவத்தை அதிகம் உணர்ந்தவர்கள் இந்தியர்கள் என சொல்லலாம். வட மாநிலங்களில் தினசரி சப்பாத்திக்கு, சைட் டிஷ்ஷாக பருப்பு மசியல் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தென் மாநிலங்களில் தினசரி சாம்பார் மற்றும் காய்கறி கூட்டு ஆகியவற்றுடன் சேர்த்து பருப்பு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது தவிர, இட்லி, தோசை ஆகியவற்றின் மூலமாக உளுந்தம் பருப்பு அதிகம் உட்கொள்ளப்படுகிறது. பலர், பருப்பு வகைகளை பொடியாக நுணுக்கி, அவற்றை நெய் சேர்த்து, சாதத்துடன் சாப்பிடுகின்றனர். அன்றாட உடல் இயக்கத்திற்கு தேவையான ஆற்றல் பருப்பு வகைகள் மூலமாக கிடைக்கிறது.

பருப்பு வகைகள்

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவு பிரியர்கள் என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. ஆனால் சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான்.

மேலும் பருப்புக்களில் புரோட்டீன் மட்டுமின்றி, வேறு சில ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல், பருப்புகளிலேயே பல வகைகள் உள்ளன.

அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் பொதுவான ஒன்று எது என்றால், அது குறைவான கலோரி இருப்பது தான். இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை இல்லாமல் இருக்கலாம்.

மேலும் இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், இதயநோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப் 2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். இப்போது பருப்புக்களின் வகைகளையும், அதில் உள்ள சத்துக்களையும் பார்ப்போம்.

துவரம் பருப்பு.……… துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடல் இயக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுவதை தடுக்கலாம்.

பாசிப்பருப்பு……….. பாசிப்பருப்பில் வைட்டமின் `ஏ, பி, சி, ஈ’ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.

பச்சை பயறு..………. இந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், `பி’ காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் உணவுகள் எளிதல் செரிமான மடைவதோடு, உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவியாக இருக்கும்

கொண்டைக் கடலை……… கொண்டைக் கடலையில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர், மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருக்கிறது. ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

மைசூர் பருப்பு.………. மைசூர் பருப்பின் சிறப்பு என்னவென்றால், அதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், அது உடலில் உள்ள பித்தக்கற்களை வெளியேற்றிவிடும். மேலும் ஃப்ளேவோன்ஸை அதிகம் கொண்டதால், புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும். அதுமட்டுமின்றி, இது உடலில் ரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்லும்.

சுண்டல்.….. கொண்டைக் கடலையில் ஒரு வகை தான், இந்த சுண்டல். இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சினை ஏற்படுவதையும், ரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்.

கடலைப் பருப்பு..……… கடலைப் பருப்பில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் செரிலை விட, இரண்டு மடங்கு அதிகமாக புரோட்டீன் நிறைந்திருப்பதால், இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இருதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப் ட்டுள்ளது.

சிவப்பு காராமணி..………. சிவப்பு காராமணியில் `பி’ காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வைட்டமின் பி6, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது.

ஆகவே இது புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படுவதைக் குறைக்கும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.

தட்டை பயறு..…. தட்டை பயறை குழம்பு வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. அத்தகைய தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இது இருதய நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. இதனால் தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

உளுத்தம் பருப்பு…… இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. சொல்லப்போனால், இது இறைச்சிக்கு பதிலாக ஒரு சிறந்த உணவுப் பொருள் என்றும் சொல்லலாம்.

மைசூர் பருப்பு
மசூர் பருப்பு அல்லது மைசூர் பருப்பு என்பது ஒருவகைப் பருப்பு ஆகும். இது தென்னிந்திய சமையலில் பெரிதும் பயன்படுகிறது. இதில் அதிக புரதச் சத்து உண்டு. இந்தியா, கனடா, துருக்கி ஆகிய நாடுகளில் இது அதிகளவில் பயிரிடபடுகின்றது. ஆனால் இது கனடா நாட்டில் தான் அதிகம் பயிரிடப்படுகின்றது. ஆரம்பத்தில் இந்தியாவில்தான் அதிகளவில் உற்பத்தியாக்கப்பட்டது. ஆனால் 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கனடாவில் தான் அதிக அளவில் உற்பத்தி செய்யபடுகின்றது.

மைசூர் பருப்பு பயன்கள்

மைசூர் பருப்பின் சிறப்பு என்னவென்றால், அதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், அது உடலில் உள்ள பித்தக்கற்களை வெளியேற்றிவிடும். மேலும் ஃப்ளேவோன்ஸை அதிகம் கொண்டதால், புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும். அதுமட்டுமின்றி, இது உடலில் இரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்லும்.

மசூர் பருப்பு உடலுக்கு கேடு விளைவிக்ககூடியது என நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் மசூர் பருப்பு உடலுக்கு நன்மை விளைவிக்கக்கூடியது. கேசரி பருப்பு என்றொரு பருப்பு வகை இருக்கிறது. அது பார்பதற்கு அச்சு அசல் மசூர் பருப்பு போன்றே இருக்கும். அந்த பருப்பு வகை தான் உடலுக்கு நல்லதல்ல. இந்த கேசரி பருப்பை மசூர் பருப்புடன் கலப்பதால் தான் மசூர் பருப்பு நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது.

மசூர் பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
இரும்பு, புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பி 6, பி 2, ஃபோலிக் அமிலம், கால்சியம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் மற்றும் தாதுக்கள் போன்றவை மசூர் பருப்பில் அதிகம் உள்ளது. ஒரு கப் மசூர் பருப்பில் உங்களுக்கு 14 கிராம் புரதம், 8 கிராம் உணவு நார், 44.5 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 6 மி.கி இரும்புசத்து போன்றவை இருக்கிறது. இந்த பருப்பை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் இதில் உள்ள நார்சத்து காரணமாக உடல் எடை குறையும்.

நீரிழிவு நோயை கட்டுபடுத்தும்
மசூர் பருப்பு உணவு செரிமானம் ஆகும் நேரத்தை தாமதப்படுத்துகிறது மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. இந்த பருப்பை அடிகடி உணவில் சேர்ப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கணிசமாக கட்டுப்படுத்த உதவுகிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
மசூர் பருப்பில் உள்ள சக்திவாய்ந்த அண்டிஅக்சிடேன்டுகள் தோலில் உள்ள திசுக்களின் சேதத்தை எதிர்த்து போரிட்டு, வயதான தோற்றம் ஏற்படுவதில் இருந்து நம்மை காக்கிறது. மேலும் மசூர் பருப்பை மஞ்சள் மற்றும் தேன் கலந்து முகம் மற்றும் சருமத்திற்கு தடவினால் சருமம் மிருதுவாகவும், தோலில் உள்ள கரும் புள்ளிகளை அகற்றவும் உதவுகிறது.


மசூர் பருப்பின் பயன்கள்

எடையை பராமரிக்கிறது
மசூர் பருப்பு உணவில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், இயற்கையாகவே உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. மசூர் பருப்பில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை  மெதுவாக்குகின்றன. இதனால் அதிகம் சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் தவிர்க்கபடுகிறது. மேலும் கலோரி அளவைக் குறைக்கிறது மற்றும் எடை குறைப்பிற்கு உதவுகிறது.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
மசூர் பருப்பில் உள்ள நார்ச்சத்துகள் மலச்சிக்கல், வீக்கம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை தீர்க்கிறது. மேலும், மசூர் பருப்பு வயிற்றுப் புண், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

எலும்புகளை பலப்படுத்துகிறது
மசூர் பருப்பில் உள்ள குறிப்பிடத்தக்க அளவு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் எலும்புகளில் ஏற்படும் காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற அபாயங்கள் ஏற்படுவதை குறைக்கிறது.


துவரம் பருப்பு
தென்னிந்திய சைவ சமையலில் சாம்பாருக்கு முக்கிய இடம் உண்டு. சாம்பார் என்றாலே நம் நினைவுக்கு வருவது சாம்பார்தான். சாம்பாரின் பிரதானமே துவரம் பருப்புதான். சாம்பார், பருப்பு சோறு, அரிசி பருப்பு சாதம் தொடங்கிப் பல உணவுப் பண்டங்கள் இதை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்படுகின்றன. துவரம் பருப்பு உடலுக்குச் சரிவிகித உணவைத் தருவதோடு புரதசத்து , வைட்டமின் சி சத்து, அமினோ அமிலம், நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. இந்த துவரம் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ ரீதியான பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
 

துவரம் பருப்பு மருத்துவ நன்மைகள்

உடல் எடை அதிகமாக
ஒரு சிலர் உடலில் அதிக சதைப்பற்று இல்லாமல் மிகவும் மெலிந்த தேகம் கொண்டிருப்பர். இவர்களின் இளைத்த உடல் பெருக்க துவரம்பருப்பை பசு வெண்ணெய் விட்டு வதக்கி, அரிசி சாதம் சாப்பிடும் போது இந்த கலவையுடன் பசுவின் நெய்யை கலந்து சாப்பிடுவதால் மெலிந்த தேகம் கொண்டவர்கள் உடலில் சதைபிடிப்பு உண்டாகும். உடலுக்கு வலிமை கிடைக்கும்.
இரத்த அழுத்தம் சீராக
நடுத்தர வயதை தாண்டிவிட்டாலே பெரும்பாலானவர்களுக்கு ரத்த அழுத்தம் ஒரு முக்கிய பிரச்சனையாக உருவெடுக்கிறது. துவரம் பருப்பில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுகிறது. எனவே ரத்த அழுத்த பிரச்சனை தீர அடிக்கடி உணவில் துவரம் பருப்பை சேர்த்து கொள்வது அவசியம்.
ஆரோக்கியமான வளர்ச்சி
உடலில் தசைகளின் வலுவிற்கும், வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும். துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
காயங்கள் விரைவாக குணமாகும்
நாம் வேலை செய்யும் போதும், விளையாடும் போதும் அடிபட்டு காயங்கள், புண்கள் ஏற்படுவது மிகவும் சகஜம். இத்தகைய காயங்கள் வெகு விரைவில் ஆறுவதற்கு புரத சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். காயங்களை விரைந்து ஆற்றவும், செல்களின் மறுவளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியமானது. எனவே துவரம் பருப்புகளை அடிக்கடி சாப்பிடுவதால் காயங்கள் விரைவில் குணமாகும்.
ரத்த சோகை சரியாக
ரத்தத்தில் ஃபோலேட்டுகளின் குறைபாட்டினால் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. துவரம் பருப்பில் போதுமான அளவு ஃபோலேட்டுகள் உள்ளன. எனவே ரத்த சோகை நோய்க்கு துவரம் பருப்பு ஒரு உணவாகும்.
வீக்கம், அழற்சியை குறைக்க
சிலருக்கு அடிபடும் போது உடலில் அடிபட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்படுகின்றன. இது மேலும் தீவிரமடைந்து உடல் அழற்சியும் ஏற்படுகிறது. துவரையில் உள்ள கனிமச்சத்துக்கள் வீக்கத்தைக் வேகமாக குறைப்பதோடு அழற்சி தன்மையையும் குறைக்கிறது. மேலும் அடிபட்ட இடத்தில் உண்டாகும் வீக்கம் மற்றும் இரத்தகட்டிற்கு துவரம் பருப்பை அரைத்துப் போடுவதால் வீக்கம் விரைவில் குறையும்.
நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகும்
நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். துவரையில் உள்ள ‘வைட்டமின் சி’ சத்தானது, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது.
துவரை பருப்பு சமையல்

இதய நலம் மேம்படும்
உலகெங்கிலும் இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து ஆகியவை இதயத்தின் ஆரோக்கியத்தை  மேம்படுத்துகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீர் செய்கிறது. எனவே துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதய நலம் மேம்பட்டு, ஆயுள் அதிகரிக்க்கும்.
செரிமான சக்தி அதிகரிக்கும்
துவரம் பருப்பில் உள்ள நார்ச்சத்து உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றவும் நார்ச்சத்து உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் துவரம் பருப்பு நம்மை காக்கிறது.

பாசிப்பருப்பு, சிறுபருப்பு
பாசிப்பயறு  என்பது பருப்பு வகையைச் சேர்ந்த ஒரு வகை தாவரம் ஆகும். இது பச்சைப்பயறு,  சிறுபயறு, சிறுபருப்பு, பயத்தம்பருப்பு எனவும் அழைப்படுகிறது. ஆங்கிலத்தில் இது ‘Moong Dhal’ என அழைக்கப்படும். இந்த பருப்பு பண்டைய காலம் முதலே இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வருகிறது.

பச்சைபயறு நன்மைகள்

பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது.

இதில் 24% புரோட்டின் உள்ளது. 63% கார்பொஹைட்ரெட் உள்ளது. இதில் அதிக அளவு கால்சியமும் பாஸ்பரசும் அடங்கியுள்ளது. பாசிப்பயிறு கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும். இதனால் கருவில் உள்ள குழந்தைக்கு செல்லும் உணவு ஊட்டச்சத்துள்ளதாக இருக்கும்.

பாசிப்பயறு இரண்டு விதமாகப் பயிரிடப்படுகின்றது. புஞ்சைத் தானியமாகப் புஞ்சைக் காடுகளில் விளைவது ஒருவகை. நஞ்சை நிலங்களில் நெல் விளைந்த பின் ஓய்வு நாள்களில் விளைச்சல் பெறுவது மற்றொரு வகை. இந்த பயறு துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், வீரியமுள்ளதுமாகும். நல்ல ருசி உடையது. பசியைத் தூண்டி எளிதில் செரிமானமாகக் கூடியது. இரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேறிவிடும். ஆகவே இரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை இது குணப்படுத்தும். சிறுநீர் தேவையான அளவில் பெருகவும், வெளியேறவும் இது உதவும். கபமோ, பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும்.

சிறுபருப்பு நன்மைகள்

பாசிப்பருப்பு பயன்கள்
1. முலைகட்டிய பாசிப்பருப்பு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கும்.

2. பாசிப்பருப்பை அரைத்து உடலுக்கு தேய்த்து குளித்து வந்தால் சருமம் பொலிவு பெறும். தலைக்கு தேய்த்து குளித்து வருவதால் பொடுகு தொல்லை இருக்காது.

3. பாசிப்பருப்பை கீரைகளோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடையும். இதனால் உடல் வெப்பம் சீராகும். இதனால் மூல நோய்கள் குணமாகும்.


3. புளியங்கொளுந்துடன் பாசிப்பருப்பை சேர்த்து கடைந்து உணவாக உட்கொள்வதன் மூலம் உடலுக்கு பலம் உண்டாகும்.

4. பாசிப்பருப்பில் செய்த பொங்கலை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மற்றும் பித்தம் குணமாகும்.

5. பாசிப்பருப்பினை உணவுடன் சேர்த்து வந்தால் உடல் பருமன் கட்டுக்குள் இருக்கும். மேலும் இந்த பருப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதால் நோய் தாக்கும் அபாயம் குறைவு.

6. குழந்தைகளுக்கு பாசிபருப்பை நன்றாக வேகவைத்து, கடைந்து அதனுடன் நெய் சேர்த்து கொடுத்து வந்தால் குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்கும்.

7. இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு பாசிப்பயிறு ஒரு சிறந்த உணவாகும். தினமும் இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் இரத்தச்சோகை நோய் ஏற்படாது.

8. கால்சிய சத்து குறைபாட்டுக்கு இது நல்ல உணவாகும். “ஆஸ்டியோபோரோசிஸ்” எனும் எலும்பு நோய் உள்ளவர்கள் பாசிப்பருப்பை உணவுடன் எடுத்துக்கொண்டால் நோய் எளிதில் குணமாகும்.

9. பச்சைப் பயிரை வேக வைத்து கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.

10. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு.

11. மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

12. குளிக்கும்போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.


பொட்டுக்கடலை, உடைத்தகடலை
தென் இந்தியாவில் மட்டுமல்ல, வட இந்தியவிலும் அதிகம் உபயோகிக்கும் முழுப் பயறுகளில் முக்கியமானது கொண்டைக்கடலை. கொண்டைகடலையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெள்ளை மற்றொன்று கருப்பு. இதில் வெள்ளையாக உள்ளது ஹிந்தியில் ‘சன்னா’ (Channa) என்றும், ஆங்கிலத்தில் ‘பெங்கால் கிராம்’  (Bengal Gram) என்றும் அழைக்கப்படுகிறது. இந்து மேற்கு வங்கத்தில் அதிகம் விளைகிறது.

கொண்டைகடலை உலர வைக்கப்பட்டு கிடைப்பதிலேயே பல வகைகள் உள்ளது. இது சிறியதாக பச்சை நிறத்திலும் பிரவுன் நிறத்திலும் கிடைக்கிறது. இதை  நாம் சுண்டல் செய்ய பயன்படுத்துகிறோம். பிரவுன் நிறத்தில், கொஞ்சம் அளவில் பெரியதாகவும் இருக்கும். அளவில் அதைவிட பெரியதாக வெள்ளையாக இருப்பதை ‘காபூலி சன்னா’ என்று அழைக்கிறோம். பிரவுன் கொண்டைக்கடலையை தோல் நீக்கி, உலர வைத்து கடலைப் பருப்பாக தினசரி சமையலில் உபயோகிக்கிறோம். இதை அரைத்து  மாவாக்கி, கடலை மாவாக பஜ்ஜி உள்பட பல பண்டங்களில் உபயோகிக்கிறோம். இந்தக் கடலையை தோலுடன் உப்பு நீர் தெளித்து வறுத்து உப்புக்கடலையாக சாப்பிடபடுகிறது.

பொட்டுகடலை உருண்டை
பொட்டுக்கடலை
கொண்டைக்கடலையின் தோலை நீக்கி அதை பொட்டுக்கடலை, பொரிகடலை, உடைத்தகடலை என்று பலவாறாக சொல்கிறோம். அதைத்தான் சட்னி முதல்  பலவற்றிலும் உபயோகிக்கிறோம். பொட்டுக்கடலையை தேங்காயுடன் சேர்த்து சட்னியாக சாப்பிடுவது நம் உணவு வழக்கத்தில் இருக்கிறது. உடைத்த கடலையில் உள்ள ஊட்டச்சத்துகள் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தருகின்றன.  இது லைசின் நிறைந்த சைவ புரதத்தின் மூலமாக இருப்பதால், புரத ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதில், இது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மிகவும் காரமாக, சுவையாக இருப்பதால் இதை ‘கன்  பவுடர்’ (Gun Powder) என்றும் கூறுவர்.


பொட்டுக்கடலை அல்லது உடைத்தகடலையின் ஆரோக்கிய நன்மைகள்
நரம்புகள் பலப்படும்
உடைத்த கடலை பருப்பில் இருக்கும் புரதங்கள் மற்றும் இதர சத்துக்கள் நமது உடலில் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

உடல் சக்தி மேம்படும்
உடைத்தகடலை பருப்பில் அதிகளவு புரதங்கள் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகம் சாபிடுபவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிக ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிது சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும்.

ஜீரண சக்தி அதிகரிக்கும்
நாம் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்ய வயிறு, குடல் போன்ற உறுப்புக்கள் ஆரோக்கியமாகவும், ஆற்றல் மிகுந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். உடைத்த கடலை பருப்பில் உள்ள எளிதில் ஜீரணம் ஆக கூடிய புரத சத்து மற்றும் நார்ச்சத்து நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றவும், உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதய நலம் மேம்படும்
உலகெங்கிலும் இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொழுப்பில்லாத உணவுகளை அறவே தவிர்த்து, புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் இதய நலம் மேம்படும். புரத சத்து அதிகம் நிறைந்த உடைத்த கடலை பருப்பை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கும்.

ஆரோக்கியமான வளர்ச்சி
உடைத்த கடலையில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமாகும். நாம் அதிகம் உடைத்த கடலை பருப்புகளை சாப்பிடுவதால் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
பருப்பு வகைகள் அனைத்துமே மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துபவையாகவே உள்ளன. உடைத்த கடலை பருப்புகளை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஜுரம், வைரஸ் தொற்று போன்றவற்றிலிருந்து நம்மை காக்கும்.

சருமம் ஆரோக்கியம் வளரும்
உடைத்த கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் அவ்வளவு எளிதில் ஏற்படாது. இந்த பருப்பில் நிறைந்திருக்கும் புரதம் மற்றும் இதர சத்துகள் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை விரைவாக நீக்கும் தன்மை இந்த உடைத்த கடலை பருப்பிற்கு உண்டு.

கொண்டைக்கடலை
கொண்டைக்கடலை நம் நாட்டில் பரவலாக உபயோகபடுத்தபடும் ஒரு சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள். கடவுளுக்கு படைக்கபடும் உணவுபொருட்களில் பெரும்பாலும் இது படையலாகப் படைக்கப்படுகிறது.
இது பசியைப் போக்கி ஆற்றலை வழங்குவதுடன் உடல்நலனையும் மேம்படுத்துகிறது. ஆதலால்தான் இதனை நம் முன்னோர்கள் விரத வழிபாட்டில் பயன்படுத்தியுள்ளனர்.


கொண்டைக்கடலை வகைகள்
கொண்டைக்கடலையிலிருந்து நாம் பயன்படுத்தும் உடைத்தகடலை, உப்புகடலை, கடலைப்பருப்பு ஆகியவை பெறப்படுகின்றன. இவை பொதுவாக வெள்ளை, கறுப்பு, மற்றும் பச்சை நிறங்களில் காணப்படுகின்றன.

கொண்டைக்கடலையின் வளர் இயல்பு
கொண்டைக்கடலை செடி 30 முதல் 60 செமீ உயரம் வரை வளரும். இது வறட்சியைத் தாங்கி வளரும் குளிர்காலப் பயிர் ஆகும். நல்ல வளமான மண் மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை இருந்தால் இந்த செடி நன்கு வளர்ந்து நல்ல மகசூலை தரும்.
இந்த செடி இறகு வடிவ இலைகளைக் கொண்டது. இத்தாவரத்தில் சிறிய காய்கள் தோன்றுகின்றன. இக்காய்களில் 1-3 விதைகள் இருக்கும். இவையே நாம் உண்ணும் கொண்டைக்கடலை ஆகும்.
கொண்டைக்கடலையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள்
கொண்டைக்கடலையில் ஏராளமான நுண்ணிய ஊட்டச்சத்துக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. 100 கிராம் கொண்டைக்கடலையில் 9 கிராம் புரதம், 8 கிராம் நார்ச்சத்து, 2.6 கிராம் கொழுப்பு, இரும்பு சத்து மற்றும் மக்னீஷியம் இருக்கிறது.  மேலும் 164 கலோரிகள் இருக்கிறது.  

கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

கொண்டைக்கடலையின் மருத்துவ பயன்கள்

சர்க்கரை நோயை கட்டுபடுத்தும்
கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும்  நார்ச்சத்துக்கள், புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க இவை உதவி  செய்கிறது.

இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்
கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள் ஆகும். ஏனெனில் இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும்
கொண்டைக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படாது. கொண்டைக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் கொண்டைக்கடலை உதவும்.

உடல் எடை குறையும்
கொண்டைக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடை குறைக்க நினைத்தால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  உங்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பசியை போக்கி நீண்ட நேரம் பசி ஏற்படாமல் தடுக்கும்.

ஆண்மை அதிகரிக்கும்
கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊற வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கி ஆண்மை அதிகரிக்கும்.

சிறுநீர் பிரச்சினைகள் தீரும்
கொண்டைக்கடலையை வறுத்து பொடி செய்து தினமும் இருமுறை உட்கொண்டு வந்தால் வயிற்று பொருமல், சிறுநீர் சரிவர வெளிப்படாமல் சொட்டு சொட்டாக போதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.

எலும்புகள் உறுதியடையும்
எலும்புகளின் உறுதிக்கு வைட்டமின், தாதுக்கள், கால்சியம், மக்னீஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் கே போன்றவை தேவை. இவை அனைத்தும் கொண்டைக்கடலையில் அபரிமிதமாக உள்ளது. எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் கொண்டைகடலையை  அதிகம் சேர்த்து கொள்ளலாம்.  

இருதய ஆரோக்கியம் மேம்படும்
உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதனால் இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவு.  கொண்டைக்கடலையை அதிகம் சாப்பிடுவதால் இருதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மூளை வளர்ச்சி அதிகரிக்கும்
கொண்டைக்கடலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூளை செயல்பாடு அதிகரிக்கும், தசைகளின் வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்திற்கும், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவும்.

நரம்பு மற்றும் கல்லீரல் பலப்படும்

வைட்டமின் பி 9 மற்றும் ஃபோலேட் ஆசிட் ஆகியவை கொண்டைக்கடலையில் இருக்கிறது.  மூளை செயல்பாட்டிற்கும், தசைகளின் வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்திற்கும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் கொண்டைக்கடலையை அடிக்கடி சாப்பிடலாம்.  கல்லீரலில் உள்ள கொழுப்புகளை குறைத்து உறுப்புகளை சீராக வேலை செய்ய வைக்கும் தன்மை கொண்டைக்கடலைக்கு உண்டு.

கொள்ளு பயறு மருத்துவ பயன்கள்

கொள்ளு
கொள்ளு ஒருவகை பயறு வகையாகும். இதற்கு கொள், காணம், முதிரை என்று  வேறு பல பெயர்களும் உண்டு. இது தட்டையாக பழுப்பு மற்றும் செமண் நிறத்திலும் காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் 'ஆர்ஸ் கிராம்' (Horse Gram) என்று பெயர். அதற்குக் காரணம் இந்த பயறு குதிரைக்கு தீவணமாகக் கொடுக்கப்பட்டது.

கொள்ளின் மருத்துவ பலன்கள்

எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் உணவாக அளித்தனர். குதிரைகள் பல மைல் தூரம் தொடர்ந்து ஓடும் சக்தியை அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில்  இருந்து எடுத்து கொள்கிறது. கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு  அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

கொள்ளில் அடங்கியுள்ள ஊட்டசத்துக்கள்
கொள்ளில் புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து, மாவுசத்து, தாதுபொருள்கள், வைட்டமின்கள் போன்றவை மிகுதியாக நிறைந்துள்ளது. மேலும் எண்ணற்ற நுண்சத்துகளையும் கொள்ளு தன்னகத்தே கொண்டுள்ளது.

கொள்ளின் மருத்துவப்பயன்கள்
உடல் எடையை குறைக்கும்

‘இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழியை கேட்டிருப்பீர்கள். அந்த பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைக்க தேவையான சத்துக்கள் கொள்ளில் நிறைந்து உள்ளது. கொள்ளை ரசமாக வைத்து சாப்பிட்டால் மிகுந்த நன்மை அளிக்கும் என சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது.
உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும். இரவில் ஒரு கைப்பிடி கொள்ளை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

சீறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கும்
கொள்ளை நாம் தொடர்ந்து எடுத்து கொண்டால் நம் ரத்த அழுத்தம் சீரான அழுத்தத்தில் இருக்கும். மேலும் சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும். ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடுமையான உடல் உழைப்பிற்க்கு பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் குறைக்கும்.

ஊளை சதையை குறைக்கும்
கொள்ளுப் பருப்பை நீரில் ஊற வைத்து, அந்த நீரை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம், வறுத்தும் சாப்பிடலாம்.

மாதவிலக்கு சீராகும்
கொள்ளை நீரில் கொதிக்க வைத்து அந்நீரை அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்கள் பலப்படும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணில் ஏற்படும் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும்,  மாதவிலக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும், அரிசியும் சேர்த்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

கொள்ளு பருப்பின் நன்மைகள்

சளியை விரட்டும்
குழந்தைகளுக்கு மழை காலங்களில் சளி பிடித்து இருக்கும்போது கொள்ளு சூப் செய்து கொடுத்தால் சளி பிரச்சனை உடனடியாக குணமாகும். குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்களும் கொள்ளு சூப் குடிக்கலாம்.

மந்தத்தை போக்கும்
கொள்ளை அரைத்து பொடி செய்து, ரசத்தில் பயன்படுத்தி வரலாம். சிலருக்கு வாயு பிரச்சனையால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். அவர்கள் கொள்ளை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி ஏற்படும்.


வேர்கடலையின் மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகள்

நிலக்கடலை, வேர்கடலை
நிலக்கடலை ஃபேபேசீஸ் என்னும் தாவர குடும்பத்தை சேர்ந்தது.  நிலகடலையானது வேர்கடலை, மல்லாட்டை, கச்சான் என பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறது. நிலக்கடலை தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது. இன்று நிலக்கடலை  உலகில் பல்வேறு நாடுகளில் பயிரிடப்படுகிறது.

வேர்கடலை நன்மைகள்

நிலக்கடலை மருத்துவ குணங்கள்

 

வேர்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் அதிக அளவில் இருக்கிறது. எனவே நாவின் சுவை மொட்டுகளுடன் சேர்த்து நம் உடலுக்கும் வேர்கடலை ஒரு விருந்து ஆகும்.

நாம் பொதுவாக விலை அதிகம் கொண்ட பருப்பு வகைகளான  பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று நினைக்கிறோம். ஆனால், விலை மலிவான எளிதில் கிடைக்ககூடிய நிலக்கடலையில்தான் இவற்றையெல்லாம் விட சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு. அதனால்தான் இது "ஏழைகளின் முந்திரி' என்று அழைக்கப்படுகிறது.

நிலக்கடலையின் மகத்துவம்
நிலக்கடலையானது தென்னிந்தியர்களின் உணவில் இரண்டற கலந்துவிட்ட உணவு வகைகளில் ஒன்று. நிலக்கடலை பலவிதமான உணவு வகைகளிலும், பதார்த்தங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பெரும்பலனோர்க்கு அதன் மருத்துவக் குணங்கள் வெளியில் தெரிவதில்லை.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில், காய் பிடிக்கும் காய்க்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால், நிலக்கடலை செடியில் காய் பிடித்தால் எலிகள் அளவு கடந்து குட்டி போடுவதைக் காணலாம். இதனால் வயலில் எலிகள் தொல்லை அதிகமாகும். இதற்க்கு நிலக்கடலையில் உள்ள "போலிக் ஆசிட்' தான் காரணம். இந்த சத்து நிலடலையில் அதிகம் இருப்பதால் இது இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது. நிலக்கடலைச் செடியைச் சாப்பிடும் ஆடு, மாடு, நாய் வயல்வெளியைச் சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவதைக் காணலாம்.

நிலகடலையில் எண்ணெய் உற்பத்தியைத் தவிர, வெண்ணெய், இனிப்பு தின்பண்டம், வறுத்த வேர்க்கடலை, சிற்றுண்டி பொருட்கள், சூப்கள் மற்றும் சாலட் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

நிலக்கடலையின் மருத்துவ பயன்கள்
கர்ப்பப்பையை வலுபடுத்தும்
நிலக்கடலையில் போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாது. அது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் சிரமமின்றி உண்டாகும். பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது. இதனால், அவர்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இதய நோய்கள் வராமல் தடுக்கும்
உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

மூளையை சுறுசுறுபாக்கும்
நிலக்கடலையில் ‘பரிப்டோபான்’ என்ற அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப்பொருள் உற்பத்தி செய்ய பயன்படுகிறது. செரட்டோனின் மூளையில் உள்ள நரம்புகளைத் தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் உதவும் விட்டமின், நியாசின் உள்ளது. இது ஞாபக சக்திக்கும் பெரிதும் உதவும். இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

நிலக்கடலை பருப்பு

கெட்ட கொழுப்பை குறைக்கும்
வேர்க்கடலைகள் ரெஸ்வெராட்ரோல், பீனாலிக் அமிலங்கள், ஃபிளாவோனாய்டுகள் மற்றும் பைட்டோஸ்டெரோல்கள் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.  இது நம் உணவில் இருந்து கெட்ட கொழுப்பு உறிஞ்சப்படுவதைத் தடுக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

நீரழிவு நோய் ஏற்படாமல் தடுக்கும்
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்து கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. பித்தப் பை கல்லைக் கரைக்கும், நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கும்.

இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
நிலக்கடலை நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் தக்கவைக்க உதவுகிறது. நிலக்கடலை சாப்பிட்டால் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், அது உண்மையில்லை. நிலக்கடலையில் உள்ள துத்தநாகம் மற்றும் தாமிரச் சத்து, நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்து, நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இன்னும் எண்ணிலடங்க நன்மைகளை நிலக்கடலை தன்னகத்தே கொண்டுள்ளது. அளவோடு நிலக்கடலையை சாப்பிடுவோம், ஆரோக்கியமாக வாழ்வோம்.

முந்திரி பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்

முந்திரி
முந்திரி அல்லது மரமுந்திரி என்பது ‘Anacardiaceae’ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். முந்திரி கொட்டைகள் பச்சையாகவோ வறுக்கப்பட்டோ சாப்பிடபடுவதுடன், கறி சமைக்கவும், ருசியைச் சேர்ப்பதற்காக வேறு உணவுகளுடன் சேர்க்கப்பட்டும் பயன்படுத்தப்படுகின்றது.

முந்திரி பருப்பு நன்மைகள்

முந்திரி பழம்
முந்திரியில் முந்திரிப்பழமென நாம் நினைப்பது உண்மையில் பழமல்ல. அது போலிப்பழம் என அழைக்கப்படும். இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் வளர்ச்சியடைகிறது. இது ‘முந்திரி ஆப்பிள்’ என அழைக்கபடுகிறது.

முந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் வளரும் அமைப்பே உண்மையான பழம் ஆகும். இது உண்மையான பழமாக இருந்தபோதிலும், இது ‘முந்திரிக்கொட்டை’ என அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது ஒரு விதையைக் கொண்ட பழமாகும்.

முந்திரி பழம் ஆரோக்கியம்

இந்த முந்திரி கொட்டையை ‘கப்பல் வித்தான் கொட்டை’ என்றும் கூறுவர். முற்காலத்தில் வணிகத்திற்காக நம் நாட்டிற்க்கு வந்த வெளி நாட்டினர் இந்த முந்திரி பருப்பின் சுவையால் ஈர்க்கப் பட்டு தாங்கள் வந்த கப்பலை விற்று இதை உண்டதாக கூறுவர்கள். போலிப் பழத்திற்கு வெளியே, சிறுநீரக வடிவில் காணப்படும் உண்மைப்பழமானது கடினமான ஒரு வெளி உறையையும், உள்ளே ஒரு விதையையும் கொண்டிருக்கும். அந்த விதையே பொது வழக்கில் ‘முந்திரிக்கொட்டை’ அல்லது முந்திரி பருப்பு என அழைக்கப்படுகிறது.

முந்திரி பருப்பு
சுவை அதிகம் கொண்ட பருப்பு வகைகளில் முந்திரி பருப்புக்கென்று ஒரு தனி இடம் உண்டு. உணவு பொருட்களில் முதன்மையான இடத்தை பிடித்திருப்பது முந்திரி பருப்பு. ஏனெனில் முந்திரி பருப்பு சேர்க்கபட்டு செய்யப்படும் உணவு பொருட்கள் தனி சுவையுடன் இருக்கும்.

முந்திரி பருப்பில் உள்ள சத்துக்கள்
முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. மேலும் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்து, இரும்புசத்து, செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.

முந்திரி பருப்பின் பயன்கள்
புற்று நோயை தடுக்கும்
முந்திரி பருப்பில் உள்ள தாவர ஊட்டச்சத்துகளும், புரதங்களும் புற்றுநோய் வராமல் தடுக்கும். தினசரி சிறது முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டுவந்தால், ரத்தஅழுத்தம் சீராக இருக்கும், மேலும் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.

முந்திரி பருப்பின் ஆரோக்கிய குணங்கள்

கொலஸ்டிராலை குறைக்கிறது
முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ரோல் அதிகளவு உள்ளது. மேலும் உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய கெட்ட கொலஸ்டிராலை குறைத்து நன்மை தரக்கூடிய நல்ல கொலஸ்டிராலை அதிரிக்க செய்கிறது.

செரிமானம் சீராகும்
முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் உயிரணு உற்பத்தி, ஜீரணம் ஆகியவை மேம்படுகிறது.

எலும்புகள் வலிமையாகும்
முந்திரி பருப்பை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் கால்சியம், மற்றும் மக்னீசியம் சத்துகளின் அளவு உடலில் அதிகரிக்கும். இந்த சத்துக்கள்தான் நரம்புகள் மட்டுமன்றி எலும்புகளின் வளர்ச்சிக்கும் தேவையானதாக இருக்கிறது. மக்னீசியம் சத்துதான் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவி புரிகிறது. முந்திரி பருப்பை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் வலிமையாகும்.

நரைமுடி பிரச்சனை தீரும்
முன்பெல்லாம் வயதானால் தான் முடி நரைக்கும். ஆனால் இப்போதோ இளம் வயதினருக்கு கூட முடி நரைக்க ஆரம்பிக்கிறது. நரைமுடியை வராமல் தடுக்க முந்திரி பருப்பை எடுத்துகொள்ள வேண்டும். ஏனெனில் முந்திரி பருப்பில் காப்பர் எனும் செம்பு சத்து உள்ளது. இது முடியின் கருமை நிறத்தைப் பாதுகாத்து.முடி விரைவில் நரைக்காமல் தடுக்கிறது.

இரத்த அழுத்தம் கட்டுபாட்டில் இருக்கும்
இப்போதெல்லாம் வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்கும் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. ரத்த அழுத்தம் ஏற்பட தற்போதுள்ள வாழ்க்கை சுழலும் ஒரு காரணம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க முந்திரி உதவுகிறது. ஏனெனில் முந்திரியில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்கும்
நம்முடைய இன்றைய நவீன உணவு முறைகளால் சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன. சிறுநீரகம் பாதிக்கபட்டால் அது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். தினமும் முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படும்.

தட்டைபயிறு, காராமணி
காராமணி என்பது பயறு வகைகளில் ஒன்று. இதனைத் தட்டைப்பயறு, தட்டாம்பயறு என்று கூறுவர். இது கருப்பு நிறத்திலும், செந்நிறத்திலும் இருக்கும்.

இது வறண்ட நிலத்திலும் செழித்து வளரும். ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் காராமணி ‘ஏழைகளின் அமிர்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

தட்டைபயிறு நன்மைகள்

இந்த பயிரினை தனியே வேகவைத்தும் சாப்பிடலாம். குழம்பு, பொரியல், அவியல் துவையல் போன்று செய்தும் சாப்பிடலாம். ஊறவைத்து அரைத்துப் பலகாரமும் சுடுவர்கள்
.
காராமணியை வாங்கும்போது ஒரே சீரான நிறத்துடன் துளைகள் இல்லாத உடையாத பயறுகளைத் வாங்க வேண்டும். காராமணியானது சூப்புகள், சாலட்டுகள், கேக்குகள், இனிப்புகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

தட்டைபயிறு, காராமணியின் வரலாறு
சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பயறு ஆப்பிரிக்காவில் முதலில் பயிரிடப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிமு 200 முதல் கிமு 300 ஆண்டிற்கு இடையில் இந்தியாவிலும் இது பயிரிடபட்டது.
தற்போது தெற்காசியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய இடங்களில் இது அதிகளவு பயிர் செய்யப்படுகிறது.

காராமணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
காராமணியில் கால்சியம், இரும்புச்சத்து, செம்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவை அதிகளவும், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. பயோசனின் என்ற பைட்டோ நியூட்ரியன் காணப்படுகிறது. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவையும் அதிகமாக உள்ளன.

மேலும் இதில் விட்டமின் பி1 (தயாமின்), பி9 (ஃபோலேட்டுகள்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்), பி3(நியாசின்), பி2 (ரிபோஃப்ளோவின்), ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன.

காராமணி மருத்துவப் பயன்கள்
ஜீரண சக்தி அதிகரிக்கும்
காராமணியானது நார்ச்சத்தினை அதிகம் கொண்டுள்ளது. எனவே ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதுடன் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படாமல் தடுக்கிறது.
நச்சுகளை நீக்கும்
காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன. மேலும் இவை ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடைசெய்கின்றன. இதனால் செல்களின் பாதிப்படைவது தடுக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இதில் இருக்கும் ‘விட்டமின் சி’ உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

நல்ல தூக்கத்தை கொடுக்கும்
காராமணியில் மெக்னீசியம் மற்றும் டிரிப்தோபன் என்னும் சத்து உள்ளது. இது உடலின் சோர்வினைப் போக்கி நல்ல தூக்கம் ஏற்பட வழிவகை செய்கிறது. தூக்க வராமல் தவிப்பவர்கள் தூங்கச் செல்வதற்கு முன்பு காராமணியை சாப்பிட்டுவிட்டு படுத்தால் நல்ல தூக்கத்தினைப் பெறலாம்.

இதயத்தை பாதுகாக்கும்
காராமணியில் காணப்படும் விட்டமின் பி1 (தயாமின்) இதய நலத்திற்கு பெரிதும் உதவுகிறது. இந்த விட்டமின் இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கிறது. மேலும் காராமணியில் காணப்படும் பிளவனாய்டுகள் இதயம் நன்றாகச் செயல்பட உதவுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்தானது உடலில் கொலஸ்ட்ரால் சேருவதைத் தடைசெய்வதோடு தமனிகளில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

காராமணி பயன்கள்

எடையை குறைக்கலாம்
காராமணியானது குறைந்த கொழுப்பை கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்தானது நல்ல செரிமானத்தைத் தூண்டுவதுடன் அதிக பசி ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் காராமணியை தொடர்ந்து எடுத்து கொள்ள வேண்டும்.

ரத்த சோகையை தடுக்கும்
உடலில் இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டால் இரத்த சோகை நோய் ஏற்படும். காராமணியில் உள்ள இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.

சருமம் பாதுகாக்கபடும்
காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள், விட்டமின் சி, புரதம் ஆகியவை சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள் சருமம் முதிர்ச்சி அடைவதை தடை செய்து வயதான தோற்றம் ஏற்படாமல் சருமத்தை பாதுகாக்கிறது.

எலும்புகளைப் பாதுகாக்கும்
காராமணியில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது. எனவே இதனை உண்டு எலும்புகளைப் பாதுகாக்கலாம்.

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்
காராமணியில் காணப்படும் மெக்னீசியமானது இன்சுலின் சுரப்பினை சீராக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். மேலும் இது உடல்சோர்வினை நீக்கி நல்ல தூக்கத்திற்கும் வழிவகை செய்கிறது.


கடலை பருப்பு நன்மைகள் சருமம் கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு. தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மையும் நீங்கும். - Advertisement - உடல் வளர்ச்சி உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். - Advertisement - நோய் எதிர்ப்பு ஆற்றல் எத்தகைய நோய்களும் நம்மை அணுகாமல் இருக்க நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். கடலை பருப்பில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர தாது சத்துகள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது. இதயம் இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலை பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேகரமாவதைத் தடுக்கிறது. எனவே கடலை பருப்பை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது. செரிமானம் நாம் உண்ணும் உணவை நன்கு செரிமானம் செய்யும் சக்தி நமக்கு இருக்க வேண்டும். கடலை பருப்பில் எளிதில் செரிமானமாக கூடிய புரத சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் சுரப்பை தூண்டி சாப்பிடும் உணவு எளிதில் செரிமானமாக செய்கிறது. வயிற்றில் புண்கள், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. உடல் எடை பெருக்க உலகில் பல நாடுகளில் சரியான ஊட்டச்சத்து உணவுகள் கிடைக்க பெறாமலும், முறையான உணவு பழக்கத்தை பின்பற்றாமல் இருப்பதாலும் பல மக்கள் தங்களின் வயதிற்கேற்ற சராசரி எடைக்கு குறைவான உடல் எடையையே கொண்டிருக்கிறனர். கடலை பருப்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீக்கிரத்தில் கூடும். வலிமையான எலும்புகள் கால்சியம், மக்னீசியம் ஆகிய இரண்டு தாதுகளும் நரம்புகள் மட்டுமன்றி எலும்புகளின் வளர்ச்சிக்கும் தேவையானதாக இருக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இவையிரண்டும் அவசியம். கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துகள் கடலை பருப்பில் உள்ளதால் இதை சாப்பிட்டு வரும் நபர்களுக்கு எலும்புகள் வலிமை பெறும். தலைமுடி தலைமுடி நமக்கு அழகிய தோற்றத்தை தருவதோடு மட்டுமல்லாமல், நமது தலையை அதிக வெப்பம் மற்றும் குளிரிலிருந்து காக்கும் கவசமாகவும் இருக்கிறது. தலைமுடி உதிராமல் இருப்பதற்கு நாம் உண்ணும் உணவில் புரத சத்து அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். கடலை பருப்பை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் புரத சத்து சேர்ந்து தலைமுடி உதிராமல் பாதுகாக்கும். நரம்புகள் கடலை பருப்பில் மக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள் அதிகமுள்ளது. மக்னீசியம் எலும்புகளின் மேற்பரப்பில் இருப்பதால், அவை கால்சியம் நரம்பு செல்களுக்குள் நுழைவதைத் தடுப்பதுடன், இரத்த நாளங்கள் மற்றும் தசைகளில் இருக்கும் இறுக்கத்தை தளர்த்துகிறது. நரம்பு தளர்ச்சி மற்றும் வாத நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. நீரிழிவு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுலபத்தில் உடல் பலத்தையும், ரத்தத்தில் அவசியமான சத்துக்களையும் இழந்து விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு கடலை பருப்பு கலந்து தயாரான உணவுகள் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் கடலை பருப்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் பலத்தை தரும்.