அறிவின் ஆலயம் அண்ணா...! 015
அறிஞர் அண்ணா அறிவிச்சுடர் விருது கவிதை போட்டி
அறிவின் ஆலயம் அண்ணா...
மும்மொழி அகற்றி
இருமொழி மொழிந்தவர்
அறிவின் ஆலயமாய் திகழ்ந்து
தமிழர்களின் வாழ்வினை
தரம் உயர்த்தியவர்...
தமிழர்களின் தேடலில் கிடைத்திட்ட
அரிய பொக்கிஷம்...
தமிழே பேச்சு தமிழே மூச்சு
தமிழே ஆட்சியென்று வாழ்ந்தவர்
தமிழுக்கு கிடைத்திட்ட
ஆகச்சிறந்த இலக்கியவாதி...
காஞ்சியில் ஊற்றெடுத்த சமுத்திரம்
சாவிலும் சாதனைக் கண்ட
தமிழரின் சரித்திரம்..
தரணியாலும் திறமையாலே
தனக்கென தனி முத்திரை பதித்தவர்..
மக்களின் மனதினில்
நீங்காமல் நிறைந்திருக்கும்
மங்காத ஒளிவிளக்கு
அண்ணாவெனும் திருவிளக்கு...
-கோ.ஶ்ரீஅஹிலேஷ்
கும்பகோணம்.
Comments (0)