காதலால் சபிக்கப்பட்டவள் ...!

காதல் தோல்வி கவிதை

காதலால் சபிக்கப்பட்டவள் ...!

காதலால் சபிக்கப்பட்டவள்... 

விட்டத்தை நோக்கி
விரிந்திருக்கும் விழிகளின் ஓரங்களில்
வழிந்தோடும் கண்ணீரில்
நினைவுத் திவலையாய்
நீயே நிறைகிறாய்... 

நீ எனக்கானவன் இல்லையெனும்
ஏமாற்றத்தின் வலியினை
இறக்கிவிட துணியாமல்
தூக்கி சுமக்கிறது மனம்.. 

ஆம்... 
அனுதினமும்
நின் நினைவுகளை 
இலகுவாய் தூக்கி சுமந்த மனமோ
கணக்கின்றி கனக்கிறது.. 
எனது விழிகளை மறைத்த 
நின் காதலோ
இன்று என் கழுத்தினை 
நெறித்துக் கொண்டிருக்கிறது... 

நீ நீயாகத்தான் இருக்கிறாய்
எந்தன் பிரிவோ வலியோ
ஏதொன்றும் உன்னை
சற்றும் பாதித்திருக்கவில்லை.. 
அப்படியிருக்க... 
நான் மட்டும் ஏன்?
நின் நினைவுகளை சுமக்கும்
உயிரற்ற சடலமென 
வீழ்ந்தே கிடக்கிறேன்... 
காதலால் சபிக்கப்பட்டவளா நான்?...

சசிகலா திருமால்.