காதல் நினைவுகள்....! 035

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

காதல் நினைவுகள்....! 035

காதல்  நினைவுகள்....

அன்பின்  ஊற்று நீ! 

அமைதிப்பாதையில்  உன் சிரிப்பில் மயங்கி நான். 

ஆகாயத்தாமரை நீ! 
உன் அரவணைப்பின்  சிம்மாசனம் நான். 

இன்ப மழைத்துளியாய்  வந்து  என்  நெஞ்சில்  ஈரம் தந்த காதல்  நீரோடையே! 

ஈடில்லா உன்அன்பை பெற நான். 

உயர்வு தந்தவள் நீ! 

ஊக்கம்  தரும் உன் இனிய  குரலிசையே! 

என்  உயிர் காதலி நீ! 

ஏழு பிறவியிலும்  தொடரும் நம்  வாழ்க்கை!

ஐயம்  நீக்கும் உன் அறிவுரைகள். 

ஒளி மிகுந்த உன்பார்வை! 

ஓடோடி என்னை வரச்செய்யும். 

ஔதடம் அறிந்து  என்னை காத்திட வருக! 

நாம் இருவரும் சேர்ந்து மலை உச்சியின் சிகரத்தை தொடுவோம்.

 பூ உலகின் 
காதல் நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய காதலர்தின நல்வாழ்த்துகள். 
????????????????????????????

      - இளம் சாதனையாளர் .கவிஞர். ஜெ .கோகுல் .,பி. எஸ். சி .,எம். சி .,
மேலபுலம் புதூர்.