காதல் உலகாளும்...! 036

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

காதல் உலகாளும்...! 036

காதல் உலகாளும்...

கண்களை கண்டவுடன் காதலும் வந்ததே//

பார்வை பட்டதும் பாவமும் தொலைந்ததே//

புன்னகையை பார்த்தபோது மனமும் பூத்ததே//

பேசியது எனக்கு பாடலாக ஒலித்ததே//

கூந்தல் அழகு என்னை கூருபோட்டதே//

தென்றலும் தழுவும்போது பொறாமை கூடுதே//

கைகள் தட்டும்போது இசையாய் கேட்குதே//

அன்பின் அர்த்தமாய் அழகில் ஆராதிக்குதே//

தன்னம்பிக்கை கையேடு வெற்றியும் கைகோர்க்குதே//

 நீ இருந்தால் சொர்க்கம் நாடுதே//

நீயே உலகாமாய், உயிராய் மாறியதே//

நீயும் நானும் நாமென்று ஆனதே//

உலகமே நாமானோம், காதலே நிம்மதியான தே//

காதலும் பாசமும் நேசமும் ஒன்றானதே// 

ஒன்றாய் ஒற்றுமையாய் காதலால் வெல்வோம்.

- கவிஞர். பி.பத்ரிநாராயணன்.
ஶ்ரீ பத்ரா அறக்கட்டளை.
இராஜபாளையம்.