அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம் ..! 040
அறிஞர் அண்ணா அறிவுச் சுடர் விருது கவிதை போட்டி
அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும் மனிதநேயமே கடவுளை அடையும் வழி என்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து பெரியாருடன் இணைந்து மக்களுக்காக சேவை எண்ணம் கொண்டவர்
அண்ணாவின் பல கவிதைகள் வெள்ளை யாதிக்கத்திற்கு எதிராகவும் நம்மவரின் கொள்ளை யாதிக்கத்திற்கு எதிராகவும் முழங்குகின்றன
ஏழ்மை வறுமை ஒழிந்து சமத்துவம் மலர வேண்டும் என்பது இவரது பேரெண்ணமாக இருப்பதை பல
கவிதைகள் மெய்ப்பிக்கின்றன
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்று உரைத்து
அதனில் அண்ணா அண்ணாவாகவே திகழ்ந்தார்
அண்ணாவின் பேச்சிலே இனிமே உரைநடையிலே கம்பீரம் எழுத்தாற்றலிலே படைப்புகள் ஏராளம்
சமூகப் புரட்சி பணியில் ஈடுபட்டு
தம் வாழ்க்கை சிறந்த பாதையை அடைந்து அவரின் பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது
ஆங்கில மொழியில் புலமை பெற்று ஆங்கிலேயரை வியக்கும் வண்ணம் ஆற்றல் பெற்று
யேல் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய உரை வரலாற்றுச் சம்பவமாகும்.
அறிஞர் அண்ணாவின் செயலும் சொல்லும்
ஆகாயம் போல் பரந்து விரிந்தது.
த. சித்ரா இராஜபாளையம்.
Comments (0)