சுதந்திர காற்றை சுவாசிப்போம் 11

சுதந்திர தின கவிதை

சுதந்திர காற்றை சுவாசிப்போம் 11

சுதந்திர காற்றை சுவாசிப்போம் 

கோடிக் குருதிக் கொட்டியே
குடியரசு  ஆனோம்..!

விலையில்லா விண்மீன்கள் பல
வீழ்ந்தே  இந்த
விடியலைக்  கண்டோமே....!

பிணக்குவியல்கள்
புதைத்து பிறந்ததே
நம் பாரதம்...!
இன்று ;
பணக்குவியல்கள்
புடைத்து வருந்துதே
பாவம்..!

'அச்சமில்லை' என்று
மிரட்டி வாங்கிய சுதந்திரம்..!
இன்று ;
மிச்சமில்லாமல் போனதே
எவருடைய தந்திரம்...!

இமயமும் உருகிடுமே ;
இளைஞர் எழுச்சி கண்டு...!
பெருமைகளும் பெருகிடுமே ;
புத்திப் புரட்சி கண்டு ..!

பணத்தாளுக்காக 
பாரதம் கடக்கும்  மாணவர்களே..! 

 மனம் தாய்நாட்டை 
 தாண்டும் முன் தலைகுனிவாய்..! 

  உன்னைக் கருவாக்கி
  உருவாக்கிய தாய் நாட்டைத்
   தவிக்க விட்டுவிட்டு எப்படி 
   பிழைக்கப் போகிறாய்..???

     -கவிஞர் கு அழகர்சாமி,
       பரமக்குடி.