சுதந்திர காற்றை சுவாசிப்போம் 11
சுதந்திர தின கவிதை
சுதந்திர காற்றை சுவாசிப்போம்
கோடிக் குருதிக் கொட்டியே
குடியரசு ஆனோம்..!
விலையில்லா விண்மீன்கள் பல
வீழ்ந்தே இந்த
விடியலைக் கண்டோமே....!
பிணக்குவியல்கள்
புதைத்து பிறந்ததே
நம் பாரதம்...!
இன்று ;
பணக்குவியல்கள்
புடைத்து வருந்துதே
பாவம்..!
'அச்சமில்லை' என்று
மிரட்டி வாங்கிய சுதந்திரம்..!
இன்று ;
மிச்சமில்லாமல் போனதே
எவருடைய தந்திரம்...!
இமயமும் உருகிடுமே ;
இளைஞர் எழுச்சி கண்டு...!
பெருமைகளும் பெருகிடுமே ;
புத்திப் புரட்சி கண்டு ..!
பணத்தாளுக்காக
பாரதம் கடக்கும் மாணவர்களே..!
மனம் தாய்நாட்டை
தாண்டும் முன் தலைகுனிவாய்..!
உன்னைக் கருவாக்கி
உருவாக்கிய தாய் நாட்டைத்
தவிக்க விட்டுவிட்டு எப்படி
பிழைக்கப் போகிறாய்..???
-கவிஞர் கு அழகர்சாமி,
பரமக்குடி.
Comments (0)