குடியரசு தினம்

குடியரசு தினம் கவிதை

குடியரசு தினம்

*குடியரசு தினம்:*

மூவண்ணம் உணர்த்தும் 
முப்பரிமாணம்.

செங்குருதி சிந்திய 
தியாகிகளின் சரித்திரமாய் 
காவியும்

அஹிம்சை அறவழியென 
அச்சமின்றி அரங்கேற்றியதால் 
வெள்ளையும் 

வளமிக்க பாரதம் 
வழி வழியாய் வாழ்ந்திட 
பச்சையும் 

இவையனைத்தும் இயங்க 
ஒற்றுமை எனும் 
அச்சாணிசக்கரம் கொண்டு

வல்லரசாய் வலிமையோடு 
வருங்காலத்தில் வாகைசூடிட 

சங்கடம் இன்றி
சமஉரிமை கொடுத்து 
சமயச்சார்பற்றநாடாய்
சமுதாயநலம்வேண்டி  
சந்தோசம் பெறுக 

முன்னோர்கள் முன்னின்று 
பெற்றுத்தந்த குடியரசை 
பேணி காத்திடுவோம்.

*இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்* 

- ©️ஹரி