ஆசிரியர் தின வாழ்த்து கவிதை..!
ஆசிரியர் தின வாழ்த்து
கல்விக்கண் திறந்த கடவுள்கள் தினம்
கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் தினம்
கருவறைக்கு அம்மா கல்வியறைக்கு ஆசிரியர்
சுயநலம் பாராத பொதுநல சிற்பிகள்
சுருங்கிய கல்லையும் இமயத்தின் சிகரமாக்கும் உளி கொண்டு செதுக்காது
மொழிகொண்டு செதுக்கும் சிற்பிகள்
வேதங்கள் பார்க்காத
பேதங்கள் பார்க்காத மேதைகள்
உலகிற்கு வருங்கால தூன்களை உருவாக்கும் உறுதுணை யாளர்கள்!
ஆசிரியர்களிடம் கற்ற மாணவர்களாய் அவர்களுக்கு நாம் செய்யும் சிறப்பு
கற்க கசடற கற்றபின் கற்பித்தவரை, கனவிலும்மறவாது துதி வாழும்நாள்வரை!
வாழ்த்தி மகிழ்வோமா! ஆசிரியர் தினத்தில்! டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்தநாளை நினைவு கூர்ந்து!
நம் ஆசிரியர்களை போற்றித் துதிப்போம்! அனைவருக்கும் ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்!!
கவிதை மாணிக்கம்
Comments (0)