ஆயுத பூஜை
ஆயுத பூஜை கவிதை
ஆயுதங்கள் வைத்து கொண்டாடுவது ஆயுத பூஜை அல்ல!
ஆக மனிதனின் அங்கங்களே! ஆயுதங்கலாம்!
வழிகளை நல்வழிகளால் பயணிக்கும் விழிகளை ஆயுதமாக்கு!!
வழி எங்கும் பயணிக்க!
வழி எங்கும் வார்த்தைகளால் பரிமாறும் நாவுகளையும் இதழ்களையும் ஆயுதமாக்கு!
அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் அன்பு கரங்களை! பாரங்களை வாங்கியும் !தூக்கியும் இறக்கியும்!பணி செய்யும்! இரு கைகளை ஆயுதமாக்கு!!
இரவு பகல் பாராது! காடு மேடு காணாது! காலங்களை கடந்து செல்லும் கால்களை ஆயுதமாக்கு!
இருக்கும் வரை இறப்பே இல்லாது! துடிக்கும் !இரவு பகல் பாராது பணி செய்து கிடக்கும்!
உன் இருதய துடிப்பை ஆயுதமாக்கும்!!
இவைகள் அனைத்தும் இனிதே பயணிக்க உன் இருதயத்தில் ஆயுத பூஜை தொடங்கு!!
அன்பால்! அரவணைப்பால்! நற்செயலால் !
நற் வழியாய்! நற்சுமையாய்! பூஜித்துப்பார்!
இதுவே நமக்கு ஆயுத பூஜை!
கவிதை மாணிக்கம்.
Comments (0)