சித்திரக்கவியில் கலைஞருக்கு வாழ்த்து...
சித்திரைக் கவி கலைஞர்
கலைஞர் தேர்க்கவி ___________________________
பாடல் - வெண்பா மதிநதியே நின்உண்ணா நோன்பால் பெருமைதாய்மை.
தமிழகத்தின் உயர்தலைவன் குறளோவியமே -
நீஅறிஞரெல்லாம்
புகழலைவீச சுடர்கநீடு வாழியே வாழி
கலைஞர் கருணா நிதி.
பாடலின் பொருள். அறிவில் வற்றாத
பெருக்கெடுக்கும் நதியானவர்.
தனது உண்ணாவிரத போராட்டம் களால் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தவர்.
நமது தாய் தமிழகத்தின் உயர்ந்த தலைவர்.
குறளுக்கு குறளோவியம் தந்து பெருமை கண்டவர்.
உலக அறிஞரெல்லாம் உன்னைப் புகழ் சாமரம் வீசிடுவர்.
கருணாநிதியே உமது புகழ் நிலைத்து நீடு வாழ்கவே.
வாசிக்கும் வழி : இடது சக்கரத்திலிருந்து மேலே ஏறி,வலது சக்கரத்திற்கு இறங்கி,மீண்டும் மேலேறி,இடவலமாக வாசித்து வாசித்து மேலேறி உச்சி நடு கட்டத்திலிருந்து கீழிறங்கி வாசித்தால் கவிதை சரியாக வரும்.
Comments (0)