இசை ராஜா
இளையராஜா பிறந்த நாள் வாழ்த்து கவிதை
எட்டாத உயரத்தில் இசை மேதையாய்!! எண்ணிப் பார்க்க! இதயத்தில் நீங்காத ராகமாய்!!
எண்பதாவது அகவையில் எண்ணிப் பார்க்க முடியாத! மறையாத கீதமாய்,,!
கிராம ராகத்தில் தொடங்கி இசை! சிகரமாய் உயர்ந்த இசை சிற்பியே,,!
சோகத்தில் ஆறுதலாய் உம் கீதம் !!
இன்பத்தில் ஆனந்த ராகம் பாடும் மோகன கீதம்!
செவிகளில் தேன் பாய்த்துவிட்டு!
வாழ்வை இனிமையில் பயணிக்க வைத்து விட்டு !!
எண்பதாவது வயதிலும், எண்ணிப் பார்க்க முடியாத இசை மேதையாய் ,!
என்றும் இளமையாய்!
பல்லாண்டு வாழ என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கவிதை மாணிக்கம்
Comments (0)