எழுத்தறிவு தினம் கவிதை

எழுத்தறிவு தினம் கவிதை

எழுத்தறிவு தினம் கவிதை

எண்ணும் எழுத்தும்
கண்ணே

கல்வியே கண்ணாய்
கற்றல் கலையாய்
வெல்லமாய் இனிக்கும்
வெகுமதிக் கல்வியே

எழுத்துக்களை அறிந்து 
எழுதிடும் அறிவே
பழுத்துக் கனிந்த
பலாச்சுளை போல்

உலகை அறிந்து
உன்னதமாய் வாழ்ந்திட
பலதும் கற்று
பண்டிதராய் ஆகிட

புலமைகள் சிறக்க
புதுமைகள் பிறக்க
பலமான ஊன்றுகோல்
எழுத்தாற்றல் திறமையே

மனிதனுக்கு மண்ணில்
மகத்துவம் கொடுக்கும்
தனித்துவத்தை ஓங்கிட
 தளராது வளர்க்கும்

மடமை அகற்றும்
மன்மதப் பாணம்
உடைமைகளை உரியதாய் 
உலகிற்குக் கூறும்

உண்மையை உடைத்திடும்
உறுதியான சான்று
விண்ணையும் விவரிக்கும் 
விளைச்சலின் சொத்து

எழுத்தறி வித்தவன் 
எப்போதும் இறைவனாய்
போற்றியே புகழுவோம்
புத்தியின் சித்திரமாய்

தமிழ்நதி கிருஷ் அபி