காதல் மலரட்டும்...! 019
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி
அன்பு என்ற அகரத்தில் தொடங்கும்
வார்த்தை சல்லிவேரையும்
ஆணிவேராக மாற்றும் அற்புதத் திறவுகோல்
அளவோடு பெற்று வளமோடு வாழும் காலத்திலும்...
உறவுகளின் பஞ்சம் தலை விரித்து ஆளுகின்ற
கசப்பான காலத்திலும்
கைகொடுப்பது உன்னத காதலே.....
வாழ்க்கை சில நேரங்களில் சுகமாய் தெரியும்
பல நேரங்களில் சுமையாய் தெரியும்...
சுகத்தை கொண்டு சுமையை இறக்கி வைக்க தெரிந்தவர்களே
உன்னத காதலர்கள்....
உணாய் உணர்வாய் திகமும் உன்னத காதல்
மலரட்டும்
முனைவர் ப.விக்னேஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கோவை
Comments (0)