புரட்சி நாயகன் அம்பேத்கர் 044

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

புரட்சி நாயகன் அம்பேத்கர் 044

புரட்சி நாயகன் அம்பேத்கார் 

தன்னம்பிக்கையின் அடையாளம்  அண்ணல் அம்பேத்கர் //

அன்று அண்ணல் விதைத்த விதைகளே // 

இன்று வளர்ந்து நிற்கும் விருட்சமாய் // 

தன்னலம் இன்றி வாழ்ந்த அண்ணல்  இவர் // 

பொதுநலம் பேணிய இந்தியாவின் பொக்கிஷம் இவர் // 

பழுது படாத எண்ணங்களுக்கு சொந்தக்காரர் // 

பல விழுதுகளுக்கு அம்பேத்கரே மூலமாய் இருப்பவர் // 

கல்விக் கண் திறக்க கடைசிவரை போராடியவர்//
 
இனமானம் போற்றியதோடு தன்மானம்  காத்தவர் // 

தன்னம்பிக்கையின் அடையாளமாய் தரணி போற்ற வாழ்ந்தவர் // 

நடமாடும் பல்கலை கழகமாய் நகர்வலம் வந்தவர் // 

கண்ணயத்தோடு கம்பீரம் காட்டிய காந்தம் இவர் // 

மூன்றாம் தலைமுறையும் நினைவுகூறும் ஆளுமை இவர் //

ஏற்ற தாழ்வெனும் தடைகளை தாண்டி  தகர்த்தவர் //   

உலகமே வியந்து பார்க்கும் உன்னதம் இவர் // 

தடைகள் தாண்டி தீண்டாமை அழித்த தீச்சட்டி இவர் //

சமூக மாற்றத்திற்கான பாதைகள் அமைத்த மேதை இவர்// 

 வாழ்க தமிழ், வளர்க தமிழ்! 

வாழ்க வளமுடன், நன்றியுடன்!

 
 -வி.கணேஷ் பாபு,ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்.