புரட்சி நாயகன் அம்பேத்கர் 044
அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி
புரட்சி நாயகன் அம்பேத்கார்
தன்னம்பிக்கையின் அடையாளம் அண்ணல் அம்பேத்கர் //
அன்று அண்ணல் விதைத்த விதைகளே //
இன்று வளர்ந்து நிற்கும் விருட்சமாய் //
தன்னலம் இன்றி வாழ்ந்த அண்ணல் இவர் //
பொதுநலம் பேணிய இந்தியாவின் பொக்கிஷம் இவர் //
பழுது படாத எண்ணங்களுக்கு சொந்தக்காரர் //
பல விழுதுகளுக்கு அம்பேத்கரே மூலமாய் இருப்பவர் //
கல்விக் கண் திறக்க கடைசிவரை போராடியவர்//
இனமானம் போற்றியதோடு தன்மானம் காத்தவர் //
தன்னம்பிக்கையின் அடையாளமாய் தரணி போற்ற வாழ்ந்தவர் //
நடமாடும் பல்கலை கழகமாய் நகர்வலம் வந்தவர் //
கண்ணயத்தோடு கம்பீரம் காட்டிய காந்தம் இவர் //
மூன்றாம் தலைமுறையும் நினைவுகூறும் ஆளுமை இவர் //
ஏற்ற தாழ்வெனும் தடைகளை தாண்டி தகர்த்தவர் //
உலகமே வியந்து பார்க்கும் உன்னதம் இவர் //
தடைகள் தாண்டி தீண்டாமை அழித்த தீச்சட்டி இவர் //
சமூக மாற்றத்திற்கான பாதைகள் அமைத்த மேதை இவர்//
வாழ்க தமிழ், வளர்க தமிழ்!
வாழ்க வளமுடன், நன்றியுடன்!
-வி.கணேஷ் பாபு,ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்.
Comments (0)