தாய்...!
அம்மா கவிதை
தாய்
-----
தேவதை செதுக்கிய
சிற்பம் உன் வடிவாய்
உருப்பெற்று நின்றதுவே
வான் நிலா குளித்த நீர்
உன் உடலின் வெண்மை ஆனதுவே
கருவறை தோட்டத்தில்
விதை என்னை
புதைத்து வைத்தாய்
உன் சத்தை உரிஞ்சி திண்ணும்
ஒட்டுண்ணி என்னை
உபசரித்து நீ வளர்த்தாய்
பத்துமாதம் உயிர்வதை
செய்த என்னை
பக்குவமாய் பெற்றெடுத்தாய்
சிறுசெடி வாடக்கூடாதென்று
பாலுணவு நீ தந்தாய்
மழை கண்ட
பாலைவனம் போல்
எனைக்கண்டு நீ மகிழ்ந்தாய்
வா மகனே என்று சொல்லி
மார்போடு அனைத்துக் கொண்டாய்
ஹஸன் எம் பஜீத்
இலங்கை
Comments (0)