மகாகவி பாரதி..! 060

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

மகாகவி பாரதி..! 060

மகாகவி பாரதி

பாரதத்தாயின் மறு உருவமே...
இப்பாரத நாட்டின் திரு அருவமே...
விடுதலைத் தீயை விதையென மண்ணில் விதைத்தவரே....
உன் கவியின்மூலம் வீரத்தை எண்ணில் பதித்தவரே....
புரட்சிக் கருத்துக்களைப் பிறக்க வைத்தாய்-அதன்வழி புதுமைப் பெண்களைப் படைத்தாய்....
நாடு செழிக்க வந்த நந்தவனமே..
செந்தமிழின் சிறப்பு அம்சமே...
இளைய சந்ததிக்கு எழுச்சியை ஊட்டிய நாயகனே...
உன் கவிதையின்பால் காரிருள் நீக்கிய தமிழின் சேவகனே...
தன் வறுமையிலும் தமிழின் பெருமையைத் தலைநிமிரச் செய்தவனே....
பாரதம் போற்றும் எங்கள் பாரதியே...
தமிழுக்கு வேண்டும் உன்னை போன்ற மற்றொரு மகா கவியே.....

அ.நிதிஷா, சென்னை.