இயேசுவின் மகிமை
இயேசு கவிதை
இயேசுவின் மகிமை
என்றும் இனிமை..
*கெரீத்து ஓடை* வற்றிப் போக எலியாவிற்கு அப்பம் தந்த புலம்பெயர்தல் மகிமையோடு, மறுமழை வரும் வரை குறையாத
பானை நிறைந்த மாவும் தந்து *பசியாற்றிய மகிமை!*
*பெட்சா* இடத்தில் இரண்டு குருட்டு மனிதர்களுக்கு பார்வை,
செவிடனுக்கு கேட்டல் திறன்,
18 வருட ஊமையாய் இருந்தவனை பேச்ச வைத்தல்,
கலிலியோவில் *கப்பர் நகூமில்* அதிகாரி மகனை குணமாக்குதலென
*ரட்சகனான மகிமை!*
மரணத்திலிருந்த
*நயினில்* விதவை மகன்,
ஜெய்ராசு மகன்,
நண்பன் லாசகு
ஆகியோரை உயிர்த்தெழச் செய்த *அடையாளமான மகிமை!*
பக்கவாதக்காரன்
தொழிலாளிகளை
தொட்டு குணப்படுத்திய
*சக்தியான மருத்துவ மகிமை!*
*கானா* திருமண விருந்தில்
தண்ணீரை திராட்சை ரசமாக்கி
ஐந்து அப்பங்கள்
இரண்டு மீன்களைக் கொண்டு
5000 பேரின் பசியாற்றிய *விருந்தோம்பல் மகிமை!*
ஆர்ப்பரித்த
*கலிலியோ கடற் புயலை* அமைதியாக்கி,
அலை மீதான நீர் மீது நடந்த
நிகழ்வும் தந்து
*சாட்சியான மகிமை!*
யூதர் குலம் சிறப்புற
*கல்வாரி மலையில்* சொற்பொழிவு,
முற்போக்கு பிரசங்கத்தால்
*முட்கிரீடம்* பரிசுடன்,
சீர்த்திருத்த அறிவுரையால் *சிலுவையில்* அறையப்பட்டு,
காட்டிக்கொடுத்த பகைவனுக்கும்
*மன்னிப்பை* அருளிய
நன்னெஞ்சோடு,
இறந்த மூன்றாம் நாளில்
சாவினை வென்று
*உயிர்த்தெழுந்த*
இறைமாட்சி இயேசுவின் மகிமை
என்றும் இனிமையே!
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
வாலாஜாப்பேட்டை..
Comments (0)