இயேசுவின் மகிமை

இயேசு கவிதை

இயேசுவின் மகிமை

இயேசுவின் மகிமை 
என்றும் இனிமை..

*கெரீத்து ஓடை*  வற்றிப் போக எலியாவிற்கு அப்பம் தந்த புலம்பெயர்தல் மகிமையோடு, மறுமழை வரும் வரை குறையாத
பானை நிறைந்த மாவும் தந்து *பசியாற்றிய மகிமை!*

*பெட்சா*  இடத்தில் இரண்டு குருட்டு மனிதர்களுக்கு பார்வை, 
செவிடனுக்கு கேட்டல் திறன்,
 18 வருட ஊமையாய் இருந்தவனை பேச்ச வைத்தல்,
கலிலியோவில் *கப்பர் நகூமில்*  அதிகாரி மகனை குணமாக்குதலென
*ரட்சகனான மகிமை!*

 மரணத்திலிருந்த 
*நயினில்* விதவை மகன்,
ஜெய்ராசு மகன்,
நண்பன் லாசகு
ஆகியோரை உயிர்த்தெழச் செய்த *அடையாளமான மகிமை!*

பக்கவாதக்காரன் 
தொழிலாளிகளை 
தொட்டு குணப்படுத்திய 
*சக்தியான மருத்துவ மகிமை!*

*கானா*  திருமண விருந்தில் 
தண்ணீரை திராட்சை ரசமாக்கி 
ஐந்து அப்பங்கள்
இரண்டு மீன்களைக் கொண்டு 
5000 பேரின் பசியாற்றிய *விருந்தோம்பல்  மகிமை!*

ஆர்ப்பரித்த 
*கலிலியோ கடற் புயலை*  அமைதியாக்கி,
அலை மீதான நீர் மீது நடந்த 
நிகழ்வும் தந்து
*சாட்சியான மகிமை!*

யூதர் குலம் சிறப்புற 
*கல்வாரி மலையில்* சொற்பொழிவு,
முற்போக்கு பிரசங்கத்தால்
*முட்கிரீடம்* பரிசுடன்,
சீர்த்திருத்த அறிவுரையால் *சிலுவையில்* அறையப்பட்டு,
காட்டிக்கொடுத்த பகைவனுக்கும்
*மன்னிப்பை* அருளிய 
நன்னெஞ்சோடு,   
இறந்த மூன்றாம் நாளில் 
சாவினை வென்று 
*உயிர்த்தெழுந்த* 
இறைமாட்சி இயேசுவின் மகிமை
என்றும் இனிமையே!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
வாலாஜாப்பேட்டை..