பைந்தமிழ் பாவலன் பாரதி..! 027

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பைந்தமிழ் பாவலன் பாரதி..! 027

பைந்தமிழ் பாவலன் பாரதி

தமிழ்த்தாயால் உயந்தவன்-பின்
தமிழ்த்தாயை உயர்த்தியே உருகியவன் !
அமிழ்தினும் தமிழை-நாளும்
அள்ளியே பருகியவன் !
அற்ப மூடங்களுக்கு - கவியெனும்
கொள்ளியை சொருகியவன் !
முத்தமிழ் கடலுக்குள் மூழ்கி
முதன்முதலாய்
புதுக்கவிதை எனும்
முத்தினை எடுத்த வித்தகன் !
கனல் தெறிக்கும் கவிகளால்
மடமையாம்
மாசுகளை ஈங்கு
மடிய செய்த மாசித்தன் !
தமிழ்த்தேனை உண்டு நாளும்
சிந்தனைகளை ஊற்றி சென்ற
செந்தமிழ்த்தேனி !
அறத்தையும் மறத்தையும்
அருந்தமிழால் உயர்த்தி நின்ற
புவியின் கவிஞானி !
பாப்பா பாட்டும் கண்ணன் பாட்டும்
பாஞ்சாலி சபதம் குயில்பாட்டும்
பக்திப்பாட்டும் சக்திப்பாட்டும்
படிக்கவே இன்பத்தை கூட்டும் !
ஞானப்பாட்டும் மாந்தருக்கு
ஞானத்தை ஊட்டும் !
தமிழ் செழிக்க
தமிழர் தலைநிமிர்ந்து நிற்க,
உயிப்புள்ள கவிகளை
உதிர்த்த நற்கவிஞன் !
தமிழ்நிலம் பெற்றெடுத்த
தன்மான தமிழ்மகன் !
பாரதியின் புகழ் பாடி நாளும் !
பரவசம் கொள்வோம் மேதினில் நாமும்...!!!

 கவிஞர் து.ரா.சங்கர்,
 கடலூர்