இசையின் தேடலில் இணைவோம் மகிழ்ச்சியோடு...
மகிழ்ச்சி Fm 3ம்ஆண்டு கொண்டாட்டம் கவிதை
இசையால் உலகை அளப்போம்
மண்ணின் வாசம்
மனதின் நேசம்
செவிப்பறையின் தேடல் இசை...
கோடை வெயில் கொளுத்துகையில்
மாலை மழையில் நனைகையில்
தென்றலாய் காற்று வீசுகையில்...
மகிழ்ச்சியால் மனம் திளைக்கையில்
துயரத்தால் துன்புறுகையில்
இரவின் உறக்கம் தொலைக்கையில்...
இவ்வளவு ஏன்?...
கனவின் காட்சியிலும்
நினைவின் மீட்சியிலும்
தொடர்வதுதான் இசை...
குழலில் துளையில் நுழைகையில்
காற்றோடு கலந்து உயிரொலியாகிறது இசை..
மனதின் பிணிக்கு அருமருந்தாகிறது..
இதயத்துடிப்பின் இன்னுமொரு பரிணாமம்
ஸ்வரங்களின் சுவாரஸ்யம்..
வார்த்தைகளின் வாழ்க்கை
மொழிகளின் முன்னோடி
இரவுகளின் நாயகன்
வலிகளின் கண்ணீர்...
உறவுகளின் உன்னதம்
நட்புகளின் நாடித்துடிப்பு....
மௌனத்தோடு பேசும் மகத்தான மொழி இசை
சப்தஸ்வரங்களில் சப்தநாடியும் அடக்குவது இசை..
இசைக்கு மயங்கா இதயமுமில்லை
மகிழ்ச்சியில் மூழ்கா மனங்களுமில்லை..
இசையின் தேடலில் நம்மை இணைத்திடும்
மகிழ்ச்சி பண்பலையோடு
மகிழ்த்திருப்போம்...
-சசிகலா திருமால்
கும்பகோணம்.
Comments (0)