ஆளுமைகள்...!

சிறந்த ஆளுமைகள்

ஆளுமைகள்...!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆளுமையில் இருவர்!!
    ஒருவர் கல்விக்கண் திறந்து அறிவு தந்தவர்!!
    ஒருவர் அறிவால் அறிவியல்அணுசக்தி விஞ்ஞானம் தந்தவர்!

   ஐயா இருவரும் தமிழ்நாட்டில் இரு கண்கள் !
   ஐயா நீங்கள் இருவரும் எதைக்கொண்டு சாலை அமைத்து நடந்தீர்கள்!

    நீங்கள் பயணித்த சாலையில் எங்கள் கால்கள் நடக்க தடுமாறுகிறது!

     அப்படி என்னதான் சாலை போட்டு நடந்தீர்கள் !

   உங்கள் வழியில் எங்கள் பாதம் தீண்டவே முடியவில்லை!!

   ஏறாத மலைகள் எல்லாம் ஏறி ஓடிய கால்கள் ,
   எட்டாத பண கனிகளை எல்லாம் பறித்து விட்ட கைகள்!
  
   தோண்டாத புதையல் எல்லாம் தோண்டி சேர்த்து வைத்த புதையல்கள் !!

   உபரிநிலங்களை எல்லாம் தம் உரிமையாய் சேகரிக்கும் மனங்கள்!

   கள்ளத்தனமாய் பதுக்கிய நகைகளும் காசுகளும்,!
   இவையெல்லாம் காற்றுக்கும், கடும் புயலுக்கும்!
    கடும் வெள்ளத்திற்கும் அழிந்து போகின்றன!

  ஆனால் நீங்கள் சேர்த்து வைத்த செல்வங்கள்,,!
   கொள்ளையடித்தாலும் வெள்ளை அடித்தாலும்! போவதுமில்லை அழிவதும் இல்லை!!

   கிழித்து எரிந்தாலும் மண்ணுக்குள் புதைத்தாலும் !
   அது மறைவதும் இல்லை !

  மனிதராய் பிறந்து மாண்புள்ள மனிதராய் உயர்ந்து !
  எங்கள் மனதிற்குள் இன்னும் மரியாதைக்குரியவர்களாய் உயர்ந்து !!

  எட்டாத சிகரத்தில் நீங்கள் இருவரும்!

 உங்கள் உச்சத்தை தொட முடியவில்லை.!!
    உங்களை நினைத்து தான் பார்க்க முடிகிறது!

 அன்புடன் சமூக சேவையில் ,,,!
 
  கவிதை மாணிக்கம்