ஆசிரியர் தினம் கவிதை

ஆசிரியர் தினம் கவிதை

ஆசிரியர் தினம் கவிதை

அழகிய பிண்டமாய் வந்த என்னை கல்வி ஊட்டி அழகிய பேசும் ஓவியமாய் மாற்றியவர்கள்!

   ஆசிரியர்  என்னும் உளி இல்லா மூன்றாம்  நிலை சிற்பிகள்!

   இன்னல்கள் எதிர்பாராது இன்பத்தோடு கற்பிக்கும் ஆசிரியர்கள்!

   ஈன்றவர்கள் இல்லை,நம்மை,,!! இருப்பினும்பள்ளிக்கு தாய் தந்தையர்கள்!

   உரிமையை கொடுக்காவிட்டாலும்  உரிமையோடு அன்பாய் அதட்டி சொல்லிக் கொடுப்பவர்கள்,,!

 ஊக்கம் இல்லாதவரை கூட,, ஊக்கப்படுத்துபவர்கள்!

   ஒற்றுமையை கற்றுக் கொடுக்கும் உளவாளிகள்!!கல்விக்குபோராளிகள்!

    ஓங்கி உயர,, தூண்டுகோலாய் விழிக்கு நல் ஒளி கொடுப்பவர்கள்,,!

  ஔவையின் பொன்மொழிகளை அவ்வியமாய் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் !!

ஃக்து  இந்நாட்டிற்கு வருங்கால தூண்களாய் எமை மாற்றும் சிற்பிகள்!

   அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !
  ஆக்கம் 
கவிதை மாணிக்கம்!