மகாத்மா காந்தி
காந்தி ஜெயந்தி கவிதை
மகாத்மா காந்தி
குஜராத் மாநிலத்தில் பிறந்த முத்தே!
இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக உழைத்த சொத்தே!
அமைதிக்கு பெயர்போன அகிம்சைவழி போராட்டமே!
உம் முயற்சிக்கு எடுத்த ஆயுதமே!
யுத்தமின்றி இரத்தமின்றி அர்ப்பணித்த வீரனே!
இறந்தும் வாழும் இனிய மண்ணனே!
அறவழி போராட்டத்தில் உயர்ந்த அமுதமே!
சத்தியமூர்த்தி பட்டம் பெற்ற மாவீரனே!
அழகிய கொள்கைகளின்கண் வாழ்ந்த மகானே!
அப்பாவி மக்களின் அவலம் கண்டு..
தேசிய கொடியை கையில் தூக்கிய வேங்கையே!
தரணியெங்கும் ஜொலிக்கும்
ஒளி மங்கா வைரமே!
உம் வாழ்வை இன்று பாடமாய் படிக்கின்றோமே!
உம் சரிதையை சத்திய சோதனையாய் விட்டுச் சென்றீரே!
நீர் என்றும் எங்கள் நினைவில் இருக்கும் முன்னோடியே!
நீதிக்காய் போராடிய பெரும் வழக்கறிஞரே!
நேர்மை மிக்க எம் மகாத்மா காந்தியே!
-ஹம்னா அக்பர்,
இலங்கை.
Comments (0)