வசந்த காலம் ...!
நினைவுகள்
இந்த இளமை பள்ளிபருவமே வாழ்வில்
இனிய #வசந்தகாலம்
இதை கடந்த பிரிந்த பருவமே
#இலையுதிர்காலம்
என்றோ!ஒருநாள்
இணைவுகளை ஒத்திகை பார்க்க!
அன்று கூடிபிரிந்த
மாணவர்களை ஒன்றிணைக்க
அது பாலையும் பூ பூத்து குலுங்கும்
பசுமை மலர்கள் மணம் வீசி புன்னகை வீசி சிரிக்கும்!
என்றும் வாரா இளவேனிற் காலம்! அதுவே மாறா மறையா!
#வசந்தகாலம்
நட்புகளோடு நாணம் தவிர்த்து! நாணயமாய் கலந்துரையாடிய நேரம்!
விழியிலும்! இதயங்களிலும்! மாறாத தடம் பதித்த காலம் !!வாழ்க்கையில் என்றென்றும் அதுவே வசந்த காலம்!!
-கவிதை மாணிக்கம்.
Comments (0)